காதல் ஒருவரிடம் மட்டும் தான் வருமா?

அன்பை பலருக்கு பகிர்ந்தளிக்க முடியுமா?

முடியும் என்றால் அது ஆன்பாலருக்கு மட்டுமா?

இல்லை பெண்களுக்கும் அது பொருந்துமா?

ஒருவனுக்கு ஒருத்தி, அப்போ ஒருத்திக்கு?

அது பற்றி யாருமே சொல்லவே இல்லையே …

இந்தக் கேள்விகளுகெல்லாம் விளக்கமே  மை வைப் காட் மேரிட் என்ற கொரிய மொழித் திரைப்படம்.

ஒரு பெண் ஒருவனிடம் காதல் கொள்கிறாள், பின் அவனை மணக்கிறாள். சிறிது காலத்திற்கு பிறகு இன்னொருவனை மணக்க கணவனிடம் சம்மதம் கேட்கிறாள், விந்தை என்னவெனில் தான் இன்னும் கணவனை காதலிப்பதாகவும் அவனை விவாகரத்து செய்ய விரும்பவில்லை என்றும் தெரிவிக்கிறாள்.

ஒரு பெண் இரு கணவர்கள், இடையில் குழந்தை வேறு, குழந்தை தன்னுடயதா இல்லை இடையில் வந்தவனுடயதா என்று போகிறது கதை. ஒரு கட்டத்தில் மூன்று பேரும் பிரிகிற சூழல், இறுதியில் அப்பெண்ணின் நிலை என்ன என்பதுதான் கதை…

இந்தப் படத்தை பற்றிய வேறெந்த விளக்கமோ, விமர்சனமோ சொல்லப்போவதில்லை, நீங்களே பார்த்து விமர்சித்துக் கொள்ளுங்கள்.

முழு படத்தையும் பார்த்து ரசிக்க

.

உலக திரைப்படங்களில் கொரிய மொழித் திரைப்படங்களுக்கென்று  ஒரு தனி இடம் இருக்கிறது, அந்த வரிசையில் ஓல்ட் பாய் தவிர்க்க முடியாத ஒரு கொரிய மொழித் திரைப்படம். மேலுழுந்தவாரியாக பார்த்தால் இது பழிவாங்குவதை கருவாக கொண்ட சாதாரண திரைப்படம் போல தோன்றும்.  ஆனால் அதையும் மீறி கதையை முழுவதுமாக பார்த்து முடிக்கும் போது, நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குரூரமான பழிவாங்கல் கதை என்பதை புரிந்து கொள்ள முடியும்.

2003ல் வெளியான இந்த திரைப்படத்தை பார்க் சான் வூக் என்பவர் இயக்கி இருக்கிறார், இந்த திரைப்படத்தின் மூலம் ஜப்பானிய மங்கா வடிவமானது, புகழ் பெற்ற மங்கா ஓவியர் நோபௌகி மிநேகிஷி அவரால் எழுதப்பட்டது.

15 வருட தனிமைச் சிறை, அதுவும் ஒரு விடுதியின் அறை ஒன்றில் எதற்காகாக? யாரால்? சிறை வைக்கப்பட்டிருக்கின்றோம் என்று தெரியாமல் ஏறக்குறைய பைத்தியம் பிடிக்கும் நிலையில் விடுவிக்கப் படுகின்றான் கதாநாயகன். தன்னை சிறைப் படுத்தியவன் யார் என்பதை அறிந்து அவனை பழி தீர்க்க முற்படுவதே கதை.

கதையின் இறுதியில் வில்லனாக உருவகப்படுத்தியவன் கதாநாயகனால் பாதிக்கப்பட்டு அதற்கு பழி தீர்த்துக் கொள்ளவே கதாநாயகனின் 15 வருட சிறை என்பது எதிர்பார்க்காத திருப்பம். அதை விட பெரிய திருப்பம், கதாநாயகனால் காதலிக்கப்படும் பெண் அவனின் சொந்த மகள் என்பதும் அதுவும் வில்லனின் பழி வாங்கும் செயலில் ஒன்று என்பதும்.

கொரிய மொழிப்படங்களை பார்த்தவர்கள் மத்தியில் கேட்டரிந்தால் நூற்றில் தொண்ணூறு பேர் இப்படத்தை பற்றிப் பேசாமல் இருக்க மாட்டார்கள், கொரியவின் சிறந்த 10 படங்கள் என்று வரிசைப் படுத்தப்பட்டால் இப்படம் கண்டிப்பாக அதில் இடம் பெரும் என்பதில் ஐயமில்லை.

முழுப் படத்தையும் ஆங்கிலத்தில கண்டுகளிக்க…

ஐசோமெட்ரிக் அல்லது பெர்ஸ்பெக்டிவ் காட்சிக் கோணம் என்பதை பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும்,உதாரணத்திற்கு கூறுவோமெனில் கார் விளம்பர ஹோர்டிங்களில் எல்லாம் பார்த்திருப்பீர்கள்ஹோர்டிங்கை எங்கிருந்து பார்த்தோமானாலும் கார் நம்மை பார்ப்பது போலவே இருக்கும்.அந்தக் காட்சிக்கோணத்தை அடிப்படையாக வைத்து முப்பரிமான முறையில் தீட்டப்பட்டதேகீழ்கண்டகண்ணுக்கு விருந்தளிக்கும்  ஓவியங்கள் யாவும்.  சமீபத்தில் சீனாவில் நடந்தஒரு ஓவியக் கண்காட்சியில் இடம் பெற்ற முப்பரிமான ஓவியங்கள்…

DETERMINATION என்றால் என்ன என்று முடியும் இந்தப்படம், உண்மையில் மனஉறுதி என்றால் என்ன? விடா முயற்சி என்றால் என்ன? என்பதை ஒரு பள்ளி செல்லும் சிறுமியின் வாயிலாக உணர்த்தியுள்ளார் இயக்குனர்.

ஹயாத் திரைப்படம் ஒரு பள்ளி செல்லும் சிறுமியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு அதிகாலை நேரம், இரானின் ஒரு கிராமத்தில் தொடங்குகிறது கதை.

மூன்று குழந்தைகள் கொண்ட ஒரு சிறு குடும்பம், அக்குடும்பத் தலைவர் மோசமான உடல்நலககுறைவு காரணமாக மருத்துவமனைக்கு ஊராரின் உதவியோடு அவரின் மனைவி அழைத்துச் செல்கிறார். கைக்குழந்தையான தங்கையையும், பள்ளி சிறுவனான தன் தம்பியையும் குடும்பத்தின் மூத்த மகளான ஹயாத் கவனிக்கும்படியாகிறது. பள்ளி  தேர்வுக்கு போகத் துடிக்கும் ஹயாத் வீட்டுக் கடமைகளை முடித்து குழந்தையை தன் அண்டை வீட்டுக்காரர்களிடம் ஒரு மணி நேரம் பார்த்துக் கொள்வதற்காக ஒவ்வொரு வீடாக சென்று யாரும் குழந்தையை கவனிக்கும் பொறுப்பை ஏற்க மறுத்த நிலையில், ஹயாத் பள்ளி சென்றாளா? தேர்வு எழுதினாளா? என்பது தான் கதை…

கிழக்கித்திய நாடுகளில் ஒரு  பெண் குழந்தை  கல்வி கற்பதற்கு இருக்கும் இடையூருகளைச் சொல்லும் விதமாக எடுக்கப்பட்ட சாதாரண ஒரு வரிக்கதை போல இருந்தாலும், அருமையான திரைக்கதை மற்றும் ஹயாத்தாக வரும் சிறுமியின் நடிப்பு வாயிலாக நம்மை கதையோடு ஒன்றிப்போக செய்கிறார் இயக்குனர்.

முழுத் திரைப்படம் உங்கள் பார்வைக்கு 

நன்றி: யூ ட்யூப்

பஹ்ராம் பைசாய் இயக்கத்தில் 1989ல் வெளியான ஈரானியத் திரைப்படம் பாசு  தி லிட்டில் ஸ்ட்ரேஞசர்.   1999  நவம்பரில் பிக்சர் வேர்ல்ட் என்ற இரானிய பத்திரிகை நடத்திய வாக்கெடுப்பில் BEST IRANIAN FILM OF ALL TIME என்று  திரைப்பட விமர்சகர்களாலும், திரை வல்லுனர்களாலும் தேர்ந்தெடுக்கப்பட்டது இத்திரைப்படம்.

ஒரு இளம் சிறுவனை பிரதானமாக சுற்றிப் பின்னப்பட்டதே பாசு தி லிட்டில் ஸ்ட்ரேஞசர் திரைப்படம். தெற்கு இரானின் குசெஸ்தான் பகுதியில் இரான்-ஈராக் போரின் போது குண்டு மழை பொழிகிறது, அதில் சிக்குண்டு ஒரு குடும்பம் அழிவதில் தொடங்குகிறது படம்.  தாக்குதலில் தப்பித்து சிறுவன் பாசு ஒரு ராணுவ வண்டியில் ஏறி வடக்கு இரானுக்கு செல்ல நேரிடுகிறது. பாசு அரபிக் மொழி பேசுபவன், ஆனால் கிலாக்கி பேசும் நாயி என்ற ஒரு பெண்மணியின் வயல்வெளியில் தஞ்சமடைகிறான் சிறுவன். பாசுவின் கருமை நிறமும் அவனின் மொழியும் புரியாத நிலையில் நாயி அவளின் 2 குழந்தைகளோடு சேர்த்து பாசுவையும் தன் குழந்தையாய் கிராமத்தினர் மற்றும் உறவினர்களின் எதிர்ப்புகளை மீறி வளர்க்கிறாள். பாசு, நாயியின் அன்றாட வேலையை பகிர்ந்து கொள்கிறான், அவளுக்கு உடல் நலக குறைவு வரும்போது குழந்தைகளையும், தன் தாயாக நினைக்கும் நாயியையும் கவனித்துக் கொள்கிறான். வெளி யூருக்கு வேலை தேடி சென்ற நாயியின் கணவன் வீடு வந்து சேரும் போது, அவர்களின் மோசமான பொருளாதர நிலைமையில் பாசுவை வீட்டில் சேர்த்து வைத்திருப்பதை கண்டு கடிந்து கொள்கிறான், ஆனால் அவன் மனைவியின் தாயுள்ளத்திற்கு தலை சாய்கிறான்.

மிகவும் எளிமையாக, குழந்தைகள் கதை போல தோன்றும் இத்திரைப்படம் முழுக்க முழுக்க தாய்மையையும், ஒரு தாயின் பரிவையும் மையமாகக் கொண்டு சித்தரிக்கப்பட்டிருக்கிறது. கிராமத்தினர் அடிக்கடி வந்து நாய்யிடம் பாசுவைப் பற்றி அவதூறு பேசுவதும், அவனை துரத்தும்படி அறிவுறுத்தும் போதும் வெகுண்டு பேசும் காட்சி, வயல்வெளியில் காட்டுப் பன்றி மற்றும் பறவைகளைத் கத்தித் துரத்தும் காட்சிகள், பாசு உடல்நலக் குறைவால் அவதிப்படும் போது தாயற்ற ஒரு குழந்தையை காப்பாற்றும்படி  மருத்துவரிடம் கதறும் காட்சி என்று அடுக்கிக் கொண்டே போகலாம் ஒவ்வொரு காட்சியையும்.  நாயி பாத்திரத்தில் வரும் (கரீனா கபூரை ஞாபகப் படுத்தும்) நடிகையின் நடிப்பு அற்புதம்.

முழுப் படத்தையும் YOUTUBEல் ஆன்லைனில் பார்த்து மகிழ,

 

 

 

 

 

 

 

 

விந்துதானம் பற்றிய விக்கி டோனர் திரைப்படம்

Posted: ஜூன் 28, 2012 in உள்ளூர் சினிமா
குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

விக்கி டோனர் என்ற இந்த ஹிந்திப்படம் ஹிந்திப்பட முன்னணி நடிகர் ஜான் ஆபிரகாமால் தயாரிக்கப்பட்டு ஷூஜீத் சர்க்கார் என்பவரால் இயக்கப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் ஈரோஸ் நிறுவனத்தால் 750 திரைகளில் திரையிடப்பட்டு வெற்றிப்படமாக பேசப்பட்டது.

டாக்டர் பல்தேவ் சத்தா, குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு உதவிபுரியும் பெர்டிலிட்டி எக்ஸ்பெர்ட்(FERTILITY EXPERT). உயர் வகையான, சிறப்புத்தன்மை வாய்ந்த தரமான விந்துவை தருவோம் என்ற உத்திரவாதத்துடன், விந்து வங்கியுடன் கூடிய ஒரு சிறிய மருத்துவமனையை டெல்லியில் நடத்திவருகிறார். துர்ரதிஷ்டவசமாக அந்த உத்திரவாதத்தை அவரால் சரிவர நிறைவேற்றமுடியாமல் போகிறது, சரியான விந்து கொடையாளி கிடைக்காததே இதற்க்கு காரணம். அதன் காரணமாக டாக்டர் சத்தா தனது தேடுதல் வேட்டையை ஆரம்பிக்க விக்கி அரோரா என்ற நமது கதாநாயகனை கண்டறிகிறார். விக்கி ஒரு விதவை பஞ்சாபி தாய் டாலி என்பவளின் மகன். விக்கி, வேலை தேடும் ஒரு இளைஞன், வீட்டின் வருமானம் அவன் தாய் நடத்தும் ஒரு சிறிய அழகு நிலையத்தை நம்பியே இருக்கிறது.

இந்நிலையில் டாக்டர் படாத பாடுபட்டு விக்கியை விந்துதானம் செய்ய சம்மதிக்க வைக்கிறார். டாக்டர் சத்தாவின் நம்பிக்கை வீண் போகவில்லை, விக்கி நல்ல தரமான, சக்தி வாய்ந்த விந்து கொண்டவன் என்பது ஆய்வில் தெரியவருகிறது. பின் என்ன டாக்டரின் வாடிக்கையாளர்கள் திருப்தி படுத்தப்படுகிறார்கள், விக்கியின வருமானம் பெருக, அவனின் பொருளாதாரத் தேவைகள் பூர்தியடைகின்றன. இதற்க்கிடையில் விக்கி வங்கியில் பணிபுரியும் ஆஷிமா என்ற ஒரு பெங்காலி பெண்ணை காதலிக்க ஆரம்பிக்கிறான், பல இடையூறுகளுக்கு அப்பால் இருவரும் மனம் புரிகின்றனர்.

திருமணத்திற்கப்பால் டாக்டர் சத்தா, விக்கியால் புறக்கணிக்கப்படுகிறான். அப்படியும் சில சமயம் மனைவிக்கு தெரியாமல் விக்கி தானம் செய்கிறான் ஒரு கட்டத்தில் டாக்டரிடம் இருந்து விக்கி முழுமையாக விலகி விடுகிறான். இதற்கிடையில் ஆஷிமாவல் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்று டாக்டர்கள் கூற தம்பதிகள் உடைந்து போகிறார்கள், அதே கால கட்டத்தில் ஆஷிமவிற்க்கு விக்கி ஒரு  விந்து கொடையளி என்று தெரியவந்து அதன் காரணமாக பிரிகிறார்கள். குடும்பத்தில் பல குழப்பங்கள் ஏற்பட்டு விக்கி தனிமைப்படுத்தப்படுகிறான்.

இந்நிலையில் டாக்டர் சத்தா, பிரிந்த தம்பதிகளை இணைக்க விக்கியால் கொடயளிக்கபட்டு குழந்தைப்பேறு பெற்ற தம்பதிகள் அனைவரையும் அவர்களின் குழந்தைகள் சகிதம் மருத்துவமனையின் வெள்ளி விழாவிற்கு அழைக்கிறார், அதே நாளில் ஆஷிமாவையும், விக்கியையும் அங்கு வரவழைக்கிறார். ஆஷிமா குழந்தைப்பேறு இல்லாத நிலையில்தான் அங்கு வந்திருக்கும் எல்லா தம்பதிகளும் முன்பிருந்தனர் அவர்கள் வாழ்வில் விக்கியால் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டு சந்தோசமாக இருப்பதை ஆஷிமாவால் உணரச் செய்கிறார் டாக்டர். 53 குழந்தைகள் அவனால் கொடயளிக்கப்பட்டதையும் அந்தக் குடும்பங்களின் மகிழ்ச்சியையும் கண்டு மனமாற்றமடைகிறாள் ஆஷிமா. மேலும் விக்கியால் கொடையளிகப்பட்டு பிறந்த ஒரு குழந்தை அதன் பெற்றோரை இழந்து அனாதைக்காப்பகத்தில் இருப்பதை கண்டறிந்து அக்குழந்தையை விக்கி, ஆஷிமா தம்பதிகளுக்கு தத்து எடுக்க உதவுகிறார் டாக்டர். பின்பு என்ன சுபம் தான்.

விக்கி டோனர் விந்துதானம் மற்றும் குழந்தைப்பேரின்மையையும் அடிப்படையாகக் கொண்டது என்றாலும் கூட அடிப்படையில் இது ஒரு நகைச்சுவைக் காதல்கதை என்றே சொல்லலாம்.  இந்தப்படத்தின் தயாரிப்பாளர் ஜான் ஆபிரகாம், இப்படம் நல்ல கதையமைப்பை கொண்டிருப்பினும் நான் இப்படத்திற்கு ஏற்றவனாக இருக்கமாட்டேன் அதனால் தான் வீடியோஜாக்கியும், தொலைக்காட்சி தொகுப்பாளருமான குரானா இயக்குனரால் தேர்ந்தெடுக்கப்பட அதை வழிமொழிந்ததாக கூறி இருக்கிறார். விக்கி கதாபாத்திரத்தில் குரானா அருமையான நடிப்பை வெளிப்படுத்தியது படம் பார்த்தவர்களுக்கு நன்கு விளங்கும், ஆசிமா கதாபாத்திரத்தில் நடித்த யாமி கௌதம் மற்றும் டாக்டராக வரும் அன்னு கபூரும் அருமையாக நடித்திருகின்றனர்.

இன்றைய கால கட்டத்தில் திருமணமாகும் 100ல் 50 பேருக்கு உடனே குழந்தைப்பேறு என்பது சாத்தியமற்றுப்போகிறது. மருத்துவர்கள் பல காரணங்களை ஆய்வு ரீதியாக கூறும் நிலையில் இப்படத்தை விந்துதானம் பற்றிய விழிப்புணர்வு படமாகவோ, இல்லை அடல்ட் காமெடி வகையாகவோ எடுத்துக் கொண்டாலும் முகம் சுழிக்கும் அளவிற்கு அருவெறுக்கத்தக்க வகையில் ஒரு காட்சியும் இல்லை.

படத்தின் சில முக்கியக் காட்சிகளின் தொகுப்பு 

பெங்காலி Vs பஞ்சாபி காட்சி 

உலகின் உள்ள எல்லா எறும்புகளின் மொத்த எடை உலகிலுள்ள மொத்த மனிதர்களின் எடையளவுக்கு சமமாம் . எறும்பு தன் எடையளவு போல இரண்டு மடங்கு எடையை சுமக்கவல்லது எல்லோரும் அறிந்ததே, நினைத்து பாருங்கள் எறும்புகள் எல்லாம் மனிதர்கள் பால் வெறுப்பு கொண்டு புரட்சி செய்ய நேரிட்டு ஒட்டு மொத்தமாக எல்லா மனிதர்களையும் தூக்கி கடலில் எரிந்து விட்டால் நம் நிலைமை என்னவாகும்.

டைட்டானிக் கப்பலை கட்டுவதற்கு 7 மில்லியன் டாலர்கள் தேவைப்பட்டது, ஆனால் JAMES CAMERON இயக்கிய டைட்டானிக் திரைப்படம் தயாரிக்க 200 மில்லியன் டாலர்கள் செலவானது.

DREAMT என்ற ஒரே ஆங்கில சொல், ஆங்கில மொழியில் MT என்று முடியுமாறு அமைந்திருக்கிறது.

இந்தியாவில் கழிப்பறைகளை விட கைபேசிகளின்(MOBILE PHONE) எண்ணிக்கை அதிகமாம்.

மும்பை நகரத்தில் ஒரு நாள் சுவாசிப்பது, 2.5 பாக்கெட் சிகரட் உபயோகிப்பதற்கு சமமாம்.

தற்கொலை செய்து கொள்பவர்களின் கணக்கெடுப்பை (statistics) பார்க்கும் போது, திங்கட்கிழமை தற்கொலை செய்துகொள்வதற்கு ஏற்ற நாளாக அதிகப்படியானோர் தேர்ந்தெடுகின்றார்களாம்.

கொட்டாவி விடும் போது நாக்கை தொடுவீர்களானால் உங்கள் கொட்டாவி நின்று போகுமாம்.

நீங்கள் பேசிக்கொண்டே ஒருவருடன் நடக்கும் போது, அவரது நடையின் வேகத்திற்கு ஈடு கொடுத்து உங்களால் நடக்க முடியும், ஆகவே உங்களோடு அதிக வேகத்தில் நடப்பவரோடு சேர்ந்து உங்களின் காலை நடைப் பயிற்சியை செய்வது நன்மை பயக்கும்.

நமக்கு நாமே கிச்சு கிச்சு மூட்டிக் கொள்ள முடியுமா? முடியுமாம், உங்களின் வாயின் மேற்பகுதியை தொடும் போது உங்களுக்கு நீங்களே கூச்சம்(tickle) உண்டாகிக் கொள்ள முடியும்.

மனிதர்களின் கை ரேகையைப்போல ஒவ்வொரு மனிதனின் நாக்கில் உள்ள ரேகையும் தனித்துவம் வாய்ந்தது.

 

நன்றி: omgfacts.com

எட்வர்ட் முன்ச்சின் The Scream  மோனாலிசா ஓவியம போன்ற ஒரு நவீன ஓவியம். 1893 – 1910 வருடத்துக்கிடைப்பட்ட காலகட்டத்தில் வரையப்பட்டதாக கருதப்படும் இந்த ஓவியம் நேற்று (மே 2, 2012) sotheby’s (உலகின் மிகப் பெரிய ஓவிய மற்றும் பழம் பெருமை வாய்ந்த கலைப்பொருட்களை ஏலமிடும் நிறுவனம்) என்ற அமெரிக்க ஏல நிறுவனத்தால் ஏலமிடப்பட்டு 119,922,500 டாலருக்கு(சுமார் 630 கோடி) ஒரு பெயர் குறிப்பிடப்படாத நபருக்கு விற்கப்பட்டது.

ஏலம் 40 மில்லியன் டாலரில்(சுமார் 212 கோடி) ஆரம்பிக்கப்பட்டது. 12 நிமிடங்களில் 119,922,500 டாலருக்கு(சுமார் 630 கோடி) தொலைபேசி வாயிலாக பெயர் தெரிவிக்க விரும்பாத ஒரு நபரால் வெற்றிகரமாக ஏலமெடுகப்பட்டது. பிக்காசோவின் Nude, Green Leaves and Bust என்ற ஓவியம், 106.5  மில்லியன் டாலருக்கு(சுமார் 564 கோடி) மே 4, 2010ல் க்ரிஷ்ட்டி நிறுவனத்தால் விற்கப்பட்டதே இதற்கு முந்திய அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட ஓவியமாகும்.

எட்வர்ட் முன்ச் இந்த ஓவியத்தை 4 வகைகளின்(4 media) கீழ் நான்கு முறை (4 versions) வரைந்திருக்கிறார்.  முன்ச் அவர்களால் ஜெர்மனில் Der Schreider Natur (The Scream of Nature) பெயரிடப்பட்டது.

நன்றி: விக்கிப்பீடியா

http://en.wikipedia.org/wiki/The_Scream

தெரியுமா? உழைப்பாளர் சிலை வடித்த சிற்பி யாரென்று ?

Posted: ஏப்ரல் 30, 2012 in தெரியுமா ?
குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

மே தினம் தொழிலாளர்களுக்கான நாள் என்பது எல்லோர்க்கும் தெரியும், இதன் ரிஷிமூலம், நதி மூலம் தெரியுமா உங்களுக்கு. தெரிந்தால் சந்தோஷம், தெரியவில்லை என்றால் யாரிடாமாவது கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்;  இல்லையெனில் இந்த இடுகையின் முடிவில் அது பற்றி சொல்கிறேன்…

இந்த இடுகை தொழிலாளர் தினத்தை பற்றியது அல்ல, உழைப்பாளர் சிலை பற்றியது. நம்மில் பலர் சென்னை கடற்கரையில்  உள்ள தொழிலாளர் சிலையை பார்த்திருப்பீர்கள், சிலை அருகே நின்று புகைப்படம் எடுத்து இருப்பீர்கள். இந்த காலத்தால் அழியாத சிலையை செய்தது யார் தெரியுமா? அவரைப் பற்றிய சில செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

அவர் பெயர் தேவி பிரசாத் ராய் சௌத்ரி, வங்கத்தை சேர்ந்த இவர் அடிப்படையில் ஒரு ஓவியர் ஆனால் சிலை வடிப்பதிலும் ஆர்வம கொண்டவர். மேலும் இவர் ஒரு எழுத்தாளர், புல்லாங்குழல் இசை வித்தகர், மல்யுத்த வீரர், வேட்டைக்காரர் என்று பன்முகத் தன்மை கொண்டவர்.

4 தொழிலாளர்கள் ஒரு கடினமான பாறாங்கல்லை உந்தி தள்ளுவது போன்ற இந்த சிலை வெண்கலத்தால் உருவாக்கப்பட்டது. உழைப்பாளர்களின் கோவணத் துண்டோடு கூடிய இறுகிய உடல், உழைப்பின் களைப்பு, விடாமுயற்சி, ஒற்றுமை, மனோபலம் மேலும் உழைப்பின் உன்னதத்தை நம் பார்வைக்கு இம்மியளவும் பிசகாமல் எடுத்துக் காட்டியிருக்கிறார் ராய். சுதந்திர இந்தியாவின் கரடு முரடான பாதையில் நாம் எதிர் கொள்ள வேண்டிய கடமையை(உழைப்பை) உருவகப்படுத்துவதாக இந்த சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. அது நமக்கு இருக்க வேண்டிய மன வலிமையையும், ஒற்றுமையை எடுத்தியம்புவதாக அமைந்திருக்கிறது.

D.P.ராய், ஹிரன்மாய் ராய் சௌத்ரியிடம் சிலை வடிப்பதை கற்றார், அபாநிந்த்ரநாத் தாகூர் என்பவரிடம் WATER COLOUR முறையில் ஓவியத்தை கற்றார் பின் மேற்கத்திய பாணியில் ஆர்வம கொண்டு அவ்வழியில் தன் பணியை தொடர்ந்தார். சிலை வடிப்பதில் IMPRESSIONISM வகையின் கீழ் வரும் AUGUSTIN RODIN போன்றவர்களின் பால் ஈர்ப்பு கொண்டு நவீன மேற்கத்திய சிலை வடிப்பாளர்களின் வழியில் ராய் தன் பணியை தொடர்ந்தார். ராயின் முக்கிய அம்சமாக கருதப்படுவது செதுக்குவதை காட்டிலும் வார்த்து எடுத்தலே ஆகும். இவரின் பல படைப்புகள் உலக சிறப்பு வாய்ந்ததாகும், சென்னையில் உள்ள உழைப்பாளர் சிலை, காந்தி சிலை, பாட்னாவில் உள்ள மார்ட்டிர்ஸ் மெமோரியல்(வெள்ளையனே  வெளியேறு இயக்கத்தின் போது தேசியக் கொடியை ஏற்ற முற்பட்டு உயிர் துறந்த 7 இளைஞர்களின் நினைவாக உருவாக்கப்பட்டது), விவேகானந்தர் சிலை, தண்டி யாத்திரையை  சித்தரிப்பது போன்ற கியாரா மூர்த்தி சிலை என பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

இவர் தன் முதல் ஓவியக் கண்காட்சி 1933-34ல் கொல்கத்தாவில் நடத்தினார், 1937ல் ஆங்கிலேய அரசாங்கத்தால் MBE பெற்றார், 1953ல் லலித் கலா அகாதமியின் முதல் தலைவராகவும் பின்னர் 1955ல் UNESCOவின் ART SEMINARக்கு  தலைவரவாகவும், இயக்குனராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு 1958ல் பத்மா பூசன் விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டார். ராய் சென்னை ஓவியக் கல்லூரியின் தலைவராகவும் இருந்தார் அச்சமயம் தான் உழைப்பாளர் சிலை வடித்தார் என்பது கேள்வி, இது தவிர கடற்கரையின் மறுமுனையில் இருக்கும் காந்தியின் சிலையும் இவரால் வடிக்கப்பட்டதே.

மே தினத்தை பற்றித் தெரியாதவர்களுக்கு…

அமெரிக்காவில் ஒரு நாளில் எட்டு மணி நேரம் மட்டுமே உழைக்க முடியும், மற்றும் வார விடுமுறை போன்ற சீர்திருத்தங்களை அமலாக்க கோரி 1886ல் மே 1ம் தேதியன்று தேசம் தழுவிய ஒரு கிளர்ச்சி செய்தனர். இதில்  சிகாகோவில் கிளர்ச்சியாளர்களுக்கும் காவலர்களுக்கும் இடையே பெரிய மோதல் ஏற்பட்டது, மேலும் ஹேமார்கட் ஷ்கொயரில் குண்டுவெடிப்பு ஏற்பட்டு பலர் மாண்டனர். இந்த கிளர்ச்சியின் போது இறந்த தொழிலாளர்கள், மற்ற தொழிலாளர்களால் உலகம் முழுதும் மாவீரர்களாக போற்றப்பட்டனர். இதைத் தொடர்ந்து 1989ல் பாரிசில் நடந்த சர்வதேச சோசலிஸ்ட் காங்கிரஸ் கூட்டத்தில், மே 1ம் தேதியை தொழிலாளர் தினமாகவகும், ஒரு நாளைக்கு 8 மணி நேர உழைப்பு, வார விடுமுறையை அமல்படுத்த தீர்மானம் போட்டு அதை மற்ற நாடுகள் ஏற்கும் வண்ணம் செய்தனர்.

துணுக்கு செய்தி

மே டே என்பது தொழிலார் தினமாக அறியப்படும் நிலையில், விமானம், கப்பல் போன்ற வாகனங்களில் நெருக்கடியான நிலையில் உதவி கோரும் போது இந்த பதத்தை அதாவது மே டே என தனது அருகாமையில் உள்ள தளத்திற்கு தெரியப்படுத்தி உடனடியாக உதவியை பெறுகின்றனர். இது ஒரு பிரெஞ்சு வார்த்தை m’aider  ( Venes m’aider) என்பதில் இருந்து வந்தது. இதன் அர்த்தம் ஆங்கிலத்தில் COME HELP ME. முதன் முதலில் லண்டனில் குரோயோடின் விமானதளத்தில் ஒரு சீனியர் ரேடியோ ஆபீசர் ஒருவரால் கூறப்பட்டு அது இன்றளவும் புழக்கத்தில் உள்ள ஒரு வார்த்தையாக மாறிவிட்டது.

சமீபத்தில் வெளியான காதலில் சொதப்புவது எப்படி? படத்தை பார்த்து நண்பர்களிடம் அந்த படத்தை பற்றி விவாதித்து கொண்டிருக்கையில் ஒரு நண்பர் சொன்னார்  இதே  GENEREல  ஹிந்தியில் PYAR KA PANCHNAMAனு படம்  வந்திருக்கு பார்த்தீங்கலான்னு கேட்க உடனே பார்க்கணும்னு பிரியப்பட்டு பார்த்தேன்.

இந்த படத்தின் தலைப்பே வித்தியாசமானது பஞ்சநாமா-ங்கற வார்த்தைக்கு    ஹிந்தியில் POST MORTEM REPORTனு அர்த்தமாம், PYAR KA PUNCHNAMA னா POST MORTEM OF LOVE, வித்யசமா தானே இருக்கு… காதலில் சொதப்புவது எப்படி டாக்குமெண்டரி ஸ்டைல்ல எடுக்கப்பட்ட ஒரு காதல் கதை என்பது படம் பார்த்தவர்களுக்கு நன்றாக தெரியும், இந்தப்படம் ரொமாண்டிக் காமெடி வகை.  IT நிறுவனத்தில் பணிபுரியும் மூன்று இளம் வாலிபர்கள் காதல் வலையில் சிக்குண்டு எப்படி தத்தளிக்கிறார்கள் என்பதே கதை. 

ரஜத், நிஷாந்த(லிக்கியுட்), சௌத்ரி என்ற மூன்று நண்பர்கள் ஒரே வீட்டில் தங்கி பணிபுரிகிறார்கள். ரஜத், நேஹா என்ற பெண்ணுடன் காதல் கொள்கிறான், அவளுடன் LIVING TOGETHER முறையில் குடும்பம் நடத்துகிறான், நாள் போகப்போக அந்த உறவுமுறை ரஜத்தை துன்பத்தில் தள்ளுகிறது. நிஷாந்த தன்னுடன் பணிபுரியும் சாரு என்ற பெண்ணுடன் காதல் கொள்கிறான், அவளுக்காக அவளுடைய பணியை இவனே பலமுறை செய்து தருகிறான், ஏறக்குறைய அவளுடைய காலிலேயே விழுந்து கிடக்கிறான் இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அவளுக்கு ஏற்கனவே ஒரு BOY FREIND இருப்பது தெரிந்தும் இவனுடைய காதலை அவள் ஏற்காத பிறகும் நட்பு என்ற போர்வையில் அவளை காதல் கொள்கிறான், இந்த விஷயம் தெரிந்தும் அவள் இவனை பயன்படுத்திக் கொள்கிறாள். அவளுடைய வேலைகளை செய்வது, இரவில் துணையாக வீடு வரை செல்வது, அவளுக்கு BEAUTY PARLOUR செலவு உட்பட இவனே செய்கிறான். சௌத்ரி, ரியா என்ற பெண்ணை காதல் கொள்கிறான் அவள் ஏற்கனவே LIVING TOGETHER RELATIONSHIPல் ஒருவனோடு 5 வருடம் இருந்தவள் அவர்களுக்குள் உள்ள இடைவெளியில் இவன்பால் மையல் கொள்கிறாள். சௌத்ரி, ரியா பழைய காதலனை மறந்துவிட்டாள் என்று நினைத்து அவளுடன் பழகுகிறான் ஆனால் நாட்பட நாட்பட ரியா இன்னும் பழைய காதலனோடு நாட்களை கழிப்பது தெரிய வருகிறது. இப்படி மூன்று பேர்களும் காதலின் பிடியில் சிக்கி பின் போதும்டா சாமின்னு அந்த பெண்களை விட்டு வருவதே மீதி கதை.

இந்தப் படத்தை பொறுத்த வரையில் காதல் என்பதே ஆண்களை கையகப்படுத்த பெண்கள் கையாளும் ஒரு ஆயுதமாக காண்பிக்கப்பட்டிருக்கிறது. அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்ய, ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள(செக்ஸ் உட்பட), தனக்கு துணையாய் ஒரு செக்யூரிட்டி வேலை பார்க்க, இப்படி நீண்டு கொண்டே போகிறது லிஸ்ட்.

படத்தின் ஒரு காட்சியில் மூன்று வாலிபர்களில் ஒருவன், இந்த பெண்கள் ஒரு காதல் தோல்விக்குப் பின் வெகு எளிதாக இன்னொருவனை கவிழ்த்து விடுகிறார்கள். நம்ம பசங்களுக்குள்ள ஒரு ஒற்றுமையே இல்லை, இப்படி பட்ட பெண்களை 2 வருடங்களுக்கு எந்த ஆணும் காதலிக்க கூடாது என்ற சட்டம் வரவேண்டும் என்ற வசனம் நகைச்சுவையாக இருந்தாலும் ஆண்களின் இயலாமையை நினைத்தால் கஷ்டமாகத் தான் இருக்கிறது. (பொதுவாக எதிர்பாலர் மேல் ஒரு மோகம் எல்லோருக்கும் இருக்கும், இது பெண்களைக் காட்டிலும் ஆண்களுக்கே அதிகமாக இருக்கிறது; காரணம், பெண்கள் சுலபமாக தனக்கு துணையை தேர்ந்து எடுக்க முடிகிறது. ஆனால் ஆண்கள் நிறைய போராட்டத்திற்கு பின்னே ஒரு பெண்ணின் மனதில் இடம் பெற முடிகிறது).

பெண்களை காதலிக்க ஆரம்பிக்கும் போது அவளுக்காக காத்திருப்பதும், ஏவல் பணி புரிவதும் சுகமாக இருக்க… நாள் போகப்போக காதலியை தவிர்ப்பதும் அவளை விட்டு தனியாக பிக்னிக் போக நினைத்து பின் அவரவர் தத்தம் காதலிகளோடு  கோவா சென்று அங்கே அவதிப்படுவதும் நல்ல காட்சி அமைப்பு. நல்ல திரைக்கதை, அருமையான கதாபாத்திரங்கள், விழுந்து விழுந்து சிரிப்பீர்கள் சில காட்சிகளில், பாடல்களும் நன்றாகவே உள்ளது.

மொத்தத்தில் இந்தக் கதை பெண்களுக்கு கண்டிப்பாக பிடிக்காது காரணம் பெண்கள் ஆண்களை அவ்வளவு துன்புறுத்துவது போல கதை உள்ளது. அரக்க குணம் கொண்டவள் பெண் என்பது போல சித்தரிக்கப்பட்டிருகிறது ஆண்களுக்கும் இந்தப் படம் பிடிக்க வாய்ப்பு இல்லை காரணம் இந்தப் படத்தில் வரும் நாயகர்கள் பெண்களின் காலடியில் விழுந்து கிடப்பது போலவே படம் முழுதும் உள்ளது. ஆண்மைத்தனம் என்று சொல்லக்கூடிய ஒரு விசயமும் இல்லை படத்தில்.

படத்தில் எனக்கு பிடித்த மிக முக்கியமான காட்சி உங்கள் பார்வைக்கு