இளவரசர் ஜூதா பென்-ஹார் ஜெருசலத்தில் ஒரு பெரும் வியாபாரி. அவனுடைய பால்ய நண்பன் மெசல்லா, ஒரு ரோமன், கதை ஆரம்பிக்கும்போது அவன் தனது போர் பயிற்சிகளை எல்லாம் முடித்து ஒரு படைதளபதியாக தலைநகருக்கு வருகிறான். அவன் தனது ரோமன் என்கின்ற பிறப்பால் இறுமாப்பு கொண்டு பேசலானான் இது ஜூதாவை புண்படுத்துவதாக அமைந்தது காரணம் ஜூதா ஒரு யூதன். ஜூதாவின் வீட்டில் ஒரு அடிமை குடும்பம் இருந்தது. அதில் எஸ்தர் என்ற பணிப்பெண்ணும் அடக்கம். எஸ்தருக்கு ஜூதாவிற்கும் இடையில் ஒரு ஈர்ப்பு இருந்தது, ஆனால் எஸ்தருக்கு திருமணம் நிச்சயமானது அதன் பொருட்டு அவளுக்கு திருமண பரிசாக அடிமை நிலையில் இருந்து விடுதலை வழங்கினர் ஜூதா.
இதனிடையில் ஒரு நாள் அந்த பிராந்தியத்துக்கு புது ஆளுனர் நியமிக்கப்பட்டதை ஒட்டி ஒரு சிறிய பேரணி நடந்தது அது ஜூதா வீட்டுக்கு நேரே வரும்போது எதேச்சையாக மாடியின் நின்று பார்த்துகொண்டிருந்த ஜூதா மற்றும் அவரது தங்கை திர்சா மாடியின் கைப்பிடி சுவரை பிடிக்க அது உடைந்து ஆளுனர் தலை மீது சில செங்கற்கள் விழ ரோம வீரர்கள் ஜூதா, அவரது தங்கை திர்சா அவரது தாய் மரியம் ஆகியோரை கைது செய்தார்கள். இந்த நிகழ்ச்சியை காரணம் காட்டி ஜூதா சிரியிலடைக்கப்பட்டு விசரனைகுட்படுத்தப்பட்டான், விசாரணையில் ஜூதா இந்த நிகழ்ச்சி தற்செயலாக நடந்தது என கூறி வாதிடும் பயனில்லாமல் போனது அவரை ஆயுள்கைதியாக்கி போர் கப்பல்களில், கப்பலை செலுத்தும் அடிமையாக பணித்தனர்.
3 வருடத்துக்கு பிறகு, அர்ரியஸ் என்பவனின் போர் கப்பலில் பனி புரிந்து கொண்டிருந்தான் ஜூதா, அந்த சமயத்தில் நடந்த ஒரு பெரும் தாக்குதலின் போது ஜூதாவின் திறமையால் அந்த தாக்குதலை இலகுவாக சமாளிக்க முடிந்தது. இதனால் சந்தோசபட்ட அர்ரியஸ் தனது செல்வாக்கினால் ஜூலியஸ் சீசர்(மன்னர்), ஜூதாவின் குற்றங்கள் யாவற்றையும் மணிக்குமாறு செய்து அவருக்கு விடுதலை வாங்கி கொடுத்தார். மேலும் ஜூதாவை தனது புதல்வனாக சுவிகாரம் எடுத்துக்கொண்டார். மீட்டு எடுக்கப்பட்ட தனது சுதந்திரத்துடன், செல்வங்களுடனும் ரோமானிய வழிமுறைகளில் ரதம் செலுத்தும் முறையிலும் நல்ல தேர்ச்சி பெற்றார். இந்நிலையில் தனது குடும்பத்தை நினைத்து ஏங்கினார்.
தனது சொந்தங்களை தேடி வரும் வழியில் ஒரு அரபியனை சந்திக்க நேர்ந்தது அங்கு ஜூதாவின் தேரோடும் வன்மையை பார்த்து அந்த அரபியன் சில நாட்களுக்குள் நடக்க இருக்கும் பந்தயத்தில் தனது சார்பாக களது கொளுமாறு வேண்டினான் ஆரம்பத்தில் மறுத்துரைத்த ஜூதா, மெசல்லா அந்த பந்தயத்தில் கலந்து கொள்வதை கேள்வி பட்டு தானும் கலந்து கொள்வதாக கூறினான். இதற்கிடையில் அங்கே ஜூதாவிற்கு திருமணம் நடந்தேறுகிறது.
ஜூதா, எஸ்தரின் திருமணம் நின்றுவிடதையும், அவள் இன்னும் தன்னை காதலித்து கொண்டு இருப்பதையும் அறிந்தான். தனது தாய் மரியம் மற்றும் தங்கை திர்சாவை சிறையில் இருந்து விடுவிக்குமாறு மெசல்லாவை வேண்டினான், ரோமானியர்கள் அவர்களுக்கு தொழு நோய் இருப்பதை கண்டறிந்து அப்பொழுதே அவர்களை நகரத்தை விட்டு வெளியேற செய்தனர். எஸ்தருக்கு விஷயம் தெரிய வர அதை ஜூதாவிற்கு தெரிவிக்க வேண்டாம் என கூற. எஸ்தர் ஜூதாவின் தாய் மற்றும் தங்கை இறந்து விட்டதாக ஜூதாவிடம் கூற நேர்ந்தது.
மிகுந்த வன்மத்தோடு பந்தயத்தில் களமிறங்குகிறார் ஜூதா, மெசல்லா சூழ்ச்சியான முறையில் தேரை செலுத்தி ஜூதாவை தோற்கடிக்க போராடி தோற்று இறந்தும் போகிறான். போட்டியில் வெற்றி பெற்ற ஜூதாவை மெசல்லா இறக்கும் தருவாயில் அவனது தாய் தங்கை நகரத்துக்கு வெளியில் இருக்கும் ஒதுக்குபுறமான ஒரு இடத்தில தொழு நோயோடு போராடி கொண்டிருப்பதாக சொல்லிவிட்டு இறந்து விடுகிறான்.
வன்மத்தோடு இருக்கும் ஜூதா, மெசல்லாவின் மேலுள்ள கோபம் நீங்கியவனாக தனது தாய் தங்கையை சந்திக்க நகரத்துக்கு வெளியில் உள்ள ஒரு மலைக்குகைக்கு செல்கிறார். அவரது தாயார் ஜூதாவை சந்திக்க மறுக்கிறார், ஆனால் ஜூதா அவர்களின் மறுப்புரைகளை மீறி சந்திக்கிறார், இந்த தருணத்தில் இயேசு கிருஸ்து உயிர்த்தெழுகிறார். உலக மக்களின் பாவங்களை போக்கும் பொருட்டு தனது இன்னுயிரை ஈந்ததால் அந்த தருணத்தில் ஜூதாவின் தாய் தங்கையின் பினி போங்குகிறது, கதை இனிதாய் முடிகிறது.

நான் பார்த்த மிகசிறந்த படங்களில் இதுவும் ஒன்று…
எனக்கு பிடித்த ஆங்கில படங்களில் இதுவும் ஒன்று.
DVD உள்ளது. தோன்றும் போது பார்த்து மகிழ்வேன்.