பேசன் ஆப் க்ரைஸ்ட் (PASSION OF CHRIST ) மெல் கிப்சன் இதுவரை இயக்கிய 4 திரைப்படங்களில் என் மனம்கவர்ந்த இரண்டாவது படம், முதல் படம் எல்லோருக்கும் பிடித்த அபகாலிப்டோ. இந்த இடுகை பேசன் ஆப் க்ரைஸ்ட் பற்றியது. முதலில் இந்த படத்தை திரையரங்கில் சென்று பார்ப்பதற்கு கொஞ்சம் தயக்கமாகவே இருந்தது. மதத்தை முன்னிறுத்தி எடுத்த படத்தில் என்ன பெரிதாக இருந்து விட போகிறது மேலும் இயேசுவின் கதை எத்தனையோ படங்களில் பார்த்தாகி விட்டது இதில் என்ன புதுமை இருக்கப் போகிறது என்றே நினைத்தேன், ஆனால் வெளியான குறிகிய காலத்தில், தரமான படம் என்ற விமர்சனம், வெகுவாக எல்லோராலும் கூறப்பட்டதால் படத்தை பார்க்க சென்றேன்.
இந்தப் படம் இயேசு கிறிஸ்துவின் கடைசி 12 மணி நேரத்தில் நடந்தவற்றை எடுத்துக் கூறும் படம். முதலில் தி பேசன்(The Passion) என்ற பெயரிலியே இந்த படம் ஆரம்பமானது, ஆனால் இந்த தலைப்பை மிரமாக்ஸ்(Miramax ) நிறுவனம் பதிவு செய்து வைத்து இருந்தபடியால் தி பேசன் ஆப் தி க்ரைஸ்ட் என்று பெயர் மாற்றப் பட்டது. படம் ஓர் தோட்டத்தில் ஆரம்பிக்கிறது. ஜூடாசின் துரோகத்தால் இயேசுவை கைது செய்ய காவலர்கள் வருகிறார்கள் அந்த சமயத்தில் இயேசுவின் சீடரான பீட்டர் ஒரு காவலாளியின் காதை தன் வாளால் வெட்டிவிடுகிறார். இயேசு சண்டை போடவேண்டமென பீட்டரை நிறுத்தி வெட்டப்பட்ட காதை ஒட்டவைக்கிறார். காவலர்கள் அவரை கைது செய்து அழைத்து செல்கின்றனர், பீட்டர் அவரை தூரத்தில் இருந்து பின் தொடர்ந்து செல்கிறான். விசாரணை நடக்கிறது, இயேசுவை நீ கடவுளின் குழந்தை என்று சொல்லிக்கொள்வது உண்மையா என்று கேட்க, ஆம் என்று பதிலளிக்கிறார் இதனால் குற்றம் உறுதிபடுத்தப்படுகிறது. இதனிடையே பீட்டர் இயேசுவை யார் என்று தெரியாது என 3 முறை சொல்லி விட்டு ஓடுகிறான், ஜூடாஸ் காட்டிகொடுத்ததால் கிடைத்த பொருளைக் கொடுத்து இயேசுவை விட்டு விடுமாறு கேட்டு மறுக்கப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி தூக்கு போட்டுக் கொள்கிறான். இயேசு கவர்னர் முன் குற்றவாளியாக நிறுத்தப்படுகிறான். இந்நிலையில் அவர் மேல் இறக்கம் கொண்டு அவரை விடுவிக்க எண்ணுகிறான் கவர்னர் ஆனால் கூட்டத்தினர் அவரை மன்னிக்க கூடாது என்று சொல்லி அவருக்கு மரண தண்டனை விதிக்க நேரிடுகிறது. பின்பு சிலுவையை சுமந்து சென்று கல்வாரியில் சிலுவையில் ஏற்றப்படுகிறார்.
படத்தில் ஏசுவாக நடித்தவர் அற்புதமாக நடித்திருக்கிறார், இந்த படத்தை பொறுத்தவரை மதத்தின் அற்புதங்களை சொல்வது போல அமையாமல் ஒரு மனிதனின் துன்பம் மிகுந்த சில மணி நேரங்களையும் அதை அவர் எவ்வாறு மனம் உவந்து ஏற்றுக்கொள்கிறார் என்பதையும் அழகாக எடுத்துக்காட்டி இருக்கிறார் இயக்குனர். மெல்கிப்சன் படம் வெளியான போது கலந்துகொண்ட ஒரு பேட்டியில், இந்தப் படம் அன்பு, நம்பிக்கை, கீழ் படிதல், மன்னித்தல் இவற்றை அடிப்படையாக வைத்தே உருவாக்கப்பட்டிருக்கிறது. இன்றைய உலகத்திற்கு அன்பு, நம்பிக்கை, கீழ் படிதல், மன்னித்தல், இவையெல்லாம் எவ்வளவு அவசியம் என்பதை நீங்களே உணர்வீர்கள் என்று சொன்னார். உண்மை, தேவை தானே…
இந்தப் படத்தின் திரைக்கதை கிப்சனால் ஆங்கிலத்தில் எழுதி இலத்தினிலும், ஹிப்ரூவிலும் மொழி பெயர்க்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் உபயோகப்படுத்தப்பட்டதாக அறியப்படும் மொழியிலேயே படத்தை உருவாக்கியது இந்த படத்தின் சிறப்பம்சம். இதனால் கிடைத்த வெற்றியே கிப்சனுக்கு அபகாலிப்டோ படத்தில் மாயன் மொழியிலேயே படத்தை எடுக்கும் தைரியத்தை கொடுத்திருக்கும் என நம்புகிறேன்.
இந்தப் படத்தில் அளவுக்கு அதிகமாக வன்முறைக் காட்சிகள் உள்ளதாக ஒரு சாரார், ஏன் எனக்கும் கூட பட்டது ஆனால் அது படத்திற்கு இன்னும் வலு சேர்த்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது. இயேசுவை வித விதமான கருவிகளை கொண்டு அடித்து அவருடைய தசை நார்களை கிழிக்கும் காட்சிகள் மற்றும் ஆணி அடிக்கும் போது உண்டாகும் உபாதையை நமக்கு உணர்த்தும் அளவிற்கு ஸ்பெஷல் எபக்ட்ஸ் காட்சிகள் பிரமாதப்படுத்தி இருக்கிறது.
நான் தலைப்பில் சொல்லியது போல இந்த படம் உலகின் அதிக வசூலான ஆங்கிலமல்லாத திரைப்படம், இது $ 611,899,420 வசூலை பெற்றது.
127 நிமிடமுள்ள இத்திரைப்படத்தின் தொகுக்கப்பட்ட 4 நிமிடக் காட்சி

i am melkipson fan apokalifta valkaiyai sonna padam nalla dvd print vandal parkanum
உணர்வுகளை சொன்னால் எந்த மொழியிலும் வெல்லலாம் என்பதை கிப்சன் நிரூபித்திருக்கிறார்..ஆரோக்கியமான படைப்பு