நாவல் இலக்கியத்தில் மிகவும் சிறந்த நாவல் எதுவென்று கேட்டால் டால்ஸ்டாயின் போரும் சமாதானமும் என்பர். அதுபோல நாவல் இலக்கியத்தில் மிகச்சிறந்த நாவலாசிரியர் என்றால் சந்தேகத்திற்கிடமின்றி டாஸ்டாவ்ஸ்கி என்று தான் சொல்வார்கள். ரஸ்ய இலக்கிய மேதையான டாஸ்டாவ்ஸ்கி இளமையில் ஒரு புரட்சிவாதி இதன் காரணமாக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, தூக்குமேடை வரை சென்றவர், கடைசி நிமிடத்தில் மரண தண்டனை சிறை தண்டனையாக மாற்றப்பெற்று உயிர் தப்பினார்.
மனோதத்துவ துறை சரியான உருவம் எடுப்பதற்கு முன்னரே தன் நாவல்களை மனோதத்துவ அடிப்படையில் படைத்தவர். வேறு எங்கும் படித்து அறிந்து கொள்ள முடியாத பல விசயங்களை டாஸ்டாவ்ஸ்கியை படித்து நான் அறிந்து கொண்டேன் என்கிறார் உலகின் மிகப் பெரிய மனோதத்துவ நிபுணரான டாக்டர் பிராய்ட்.
அத்தனை புகழ்பெற்ற டாஸ்டாவ்ஸ்கியின் ஒரு உன்னத படைப்பு தான் கரமசாவ் சகோதரர்கள் என்ற நாவல். இது ஒரு துப்பறியும் நாவலை போன்ற கதையம்சம் கொண்டது. கரமசாவ் என்பது ஒரு குடும்ப பெயர், ஒரு வம்சத்தின் பெயர். இந்த வம்சத்தின் மூத்தவர் பயோடர் பாவலோவிச், ஒரு பொறுப்பற்ற தந்தை, வட்டி வியாபாரி ஓயாத குடிகாரன், காமவெறியன். உலக சுகபோகங்களில் அதிக அளவில் ஈடுபட்டவன். இன்ப வாழ்கையும் பணமுமே அவன் குறிக்கோள் மற்றவர்கள் பணத்தில் அவன் சுகபோக வாழ்க்கை நடத்தி வந்தான். பாவலோவிச் கரம்சாவின் முதல் மனைவியின் பெயர் அடலிடா அவள் மூலம் 25 ஆயிரம் ரூபிள்களையும் ஒரு வீட்டையும் சீதனமாகவும் பெற்று, அவள் மூலம் மிதியா என்ற குழந்தையையும் பெறுகிறார். பாவலோவிச்சின் கொடுமை தாங்காமல் மூன்று வயது மகன் மிதியாவைத் தன் கணவரிடம் விட்டு அவள் ஒரு இளம் காதலனுடன் ஓடிப்போய் சில காலம் அவனுடன் வாழ்ந்து இறந்து போனாள். மனைவி இறந்த செய்தி கிடைத்த போது அவன் மது அருந்தி விட்டு நண்பர்களிடம் சவால் விட்டு ஒரு பைத்தியக்காரியை பலவந்தப்படுத்தி உறவு கொண்டு பின்னாளில் அவள் மூலம் சிமார்டியாகாவ் என்ற மகனை பெற நேர்கிறான். இக்குழந்தை பிறகு வேலைக்காரன் கிரிகோரியினால் வளர்க்கப்பட்டு வேலையாளனாக பாவலோவிச்சின் வீட்டிலே இருக்க நேர்ந்தது. குடிகாரனும் மோசமான குணமும் உள்ள தகப்பன் தாயற்ற மிதியாவை எவ்விதம் வளர்ப்பான்? தன் 3 வயது மகனை அலட்சியம் செய்தான். அடியோடு மறந்து போனான். கிரிகோரி குழந்தையை வளர்த்து வந்தான் பின் மிதியாவை தாயின் சொந்தக்காரர் கொண்டு போய் வளர்த்து படிக்க வைத்தார். மிதியாவிற்கு 4 வயது நிரம்பிய சமயம் பாவலோவிச் ஒரு மாதா கோயில் அதிகாரியின் மகளான சோபியாவை 2 வது முறையாக திருமணம் செய்து கொள்கிறார். பாவலோவிச் தன் மனைவியின் எதிரிலேயே வீட்டில் மோசமான பெண்களை அழைத்து வந்து மோசமாக நடந்து கொள்வான்..
பாவலோவிச்சின் தொல்லையின் காரணமாக சோபியாவிற்கு சிறு வயதில் ஏற்ப்பட்ட நோய் மீண்டும் தலை தூக்க தொடங்குகிறது. சிற்சில சமயங்களில் இந்நோய் காரணமாக நாள் முழுதும் இழுப்பு வந்துவிடும். அப்படியும் அவள் ஐவான், அலக்சி என்ற இரு குழந்தைகளை பெற்றெடுக்கிறாள். ஐவானுக்கு 7 வயதும் அலக்சிக்கு 4 வயதும் இருக்கும் போது சோபியா இறக்கிறாள். சோபியாவின் மரணத்திற்கு பிறகு மிதியவைப்போல இவர்களும் வேலைக்காரன் கிரிகோரியிடம் வளர்ந்தனர். இந்த 4 பிள்ளைகளும்வளர்ந்து பெரியவர்களாகின்றனர் , மிதியா தன் தாயின் சொத்தை அவரின் தந்தையிடம் இருந்து கைப்பற்றுவதில் குறியாக இருந்தான். அவனுக்கு ஒரு காதலி இருந்தாள் அவளின் பெயர் கிரிஷங்கா, இவளின் பால் பாவலோவிச்சுக்கு ஒரு கண். அவளை அடைய அவரும் முயன்றுகொண்டிருந்தார். இந்நிலையில் ஒரு நாள் அவர் கொல்லப்படுகிறார், அவரை யார் கொலை செய்தது என்ற ரீதியில் கதை தொடர்கிறது. முடிவில் சிமார்டியாகாவ் கொலை செய்தது தெரிகிறது ஆனால் மிதியா சந்தர்ப்பவசத்தால் சிறைக்கு செல்கிறான். சிமார்டியாகாவ் குற்ற உணர்ச்சியில் தற்கொலை செய்து கொள்கிறான். ஐவான், அலக்சி ஆகிய இருவரும் தங்களால் தந்தையை காப்பாற்ற முடியவில்லையே என மன உளைச்சளுக்கு ஆளாகுவதாக கதை முடிகிறது.
இந்தக் கதையை பற்றி மேலும் அறிய விக்கிப்பீடியாவின் கீழ் கண்ட இணைப்பில் சென்று பாருங்கள். http://en.wikipedia.org/wiki/The_Brothers_Karamazov
இந்த கதையின் ஆசிரியர் டாஸ்டாவ்ஸ்கி பற்றி அறிய விக்கிப்பீடியாவின் கீழ் கண்ட இணைப்பில் சென்று பாருங்கள். http://en.wikipedia.org/wiki/Fyodor_Dostoyevsky


நல்லதோர் நாவலை பகிர்தமைக்கு நன்றி நண்பரே..
தமிழில் கிடைக்குமா நண்பா@
கன்னிமாரா நூலகத்தில் உள்ளது நண்பரே…
நல்ல நாவல் ….. நன்றி
நன்றி தங்கள் வருகைக்கும், மறுமொழிக்கும்.
பகிர்வுக்கு நன்றி
தங்கள் வருகைக்கு நன்றி
சிறந்த நவலோன்றினைப் பற்றிய சிறப்பான பதிவு நண்பரே..
நன்றி நண்பரே… தங்கள் வருகைக்கும், மறுமொழிக்கும்.
வலைச்சரத்தில் உங்கள் பதிவுகளைப் பகிர்ந்துள்ளேன்
http://blogintamil.blogspot.com/2011/11/blog-post_08.html