ஆகஸ்ட் 30 அன்று கலைவாணரின் பிறந்த நாளை ஒட்டி அவரின் நினைவாக அவரின் சில புகைப்படங்களை இன்று கலைவாணரின் பிறந்தநாள் என்ற இடுகையின் மூலம் உங்களோடு பகிர்ந்து கொண்டிருந்தேன். அந்த இடுகையை கண்ட கலைவாணரின் பேத்திகள் தனது மகிழ்ச்சியை தெரிவித்து பின்னூட்டம் செய்திருந்தார்கள், மேலும் அவர்கள் கலைவாணரை பற்றிய ஒரு வலைதளத்தை உருவாக்கி உள்ளதாகவும் தெரிவித்தனர். என்னுடைய முந்தைய கலைவாணரின் இடுகையில், நேரமில்லாத காரணத்தினால் அவரை பற்றி எந்த செய்தியையும் பெரிதாக குறிப்பிடவில்லை. பின்பொரு நாளில் அவரைப் பற்றிய விரிவான இடுகையை எழுத நினைத்திருந்தேன். ஆனால் நேற்று கலைவாணரின் பேத்தி மதிப்பிற்குரிய ஷண்முகப்ரியா அவர்கள் குறிப்பிட்டிருந்த வலைதளத்திற்கு சென்று பார்த்தபின், இந்த வலைதளத்தை உங்களுக்கு அறிமுகம் செய்யலாம் என்று இந்த இடுகையை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
http://www.kalaivanar.com என்ற இந்த வலைதளம் ஆங்கிலத்திலும் தமிழுலும் படிக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது, ஆனால் ஆங்கிலத்தில் மட்டுமே இப்போதைக்கு படிக்க இயலும். தமிழ்த்தளம் விரைவில் தயாராகிவிடும் என்று நம்புகிறேன். கலைவாணரின் சுருக்கமான வரலாறு, ரெஸ்யூம் போல எளிமையாக கொடுக்கப்பட்டிருக்கிறது. அவருடைய இளமைக் காலங்கள், நாடக நாட்கள், கலைவானரும் சினிமாவும், அவருடைய பொன்மொழிகள் என்று பல வகைகளின் கீழ் கலைவாணரைப் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. அவருடைய அறிய புகைப்படங்களும் நிறைய இடம் பெற்றிருக்கின்றன. நான் ரசித்த விஷயம் இந்த வலைதளத்தில் interesting incidents வகையின் கீழ் உள்ள பக்கம் அதில் ஒரு நாடக சம்பவத்தில், “சக நடிகரை பார்த்து உன்னுடைய 32 பற்களையும் பேர்த்து விடுவேன் என்று சொல்லவேண்டிய வசனத்தை உன்னுடைய 31 பற்களையும் பேர்த்து விடுவேன் என்று சொன்னாராம், நடிகர் என்ன ஒரு பல்லை விட்டுடீங்களே என்று கேட்டதற்கு, அந்த ஒரு பல்லால் நீ பல்வலி வந்தே செத்து மடி என்று தனக்கே உரிய பாணியில் நகைக்க வைத்தாராம்”.
கலைஞர் தொலைக்காட்சியில் கலைவாணரின் நினைவாக மறக்க முடியுமா? என்ற ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்பினர், நண்பர் கௌரிசங்கர் தான் அந்த நிகழ்ச்சி தயாரிப்பாளர், அவர் என்னிடம் கலைவாணரை பற்றிய பல இனிய சம்பவங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார், அதில் ஒன்று இந்த நிகழ்ச்சியின் போது பேட்டி எடுக்க கலைவாணரின் உறவினர்களை சந்தித்திருக்கிறார், அந்தப் பேட்டியின் போது அவர்கள் கூறுகையில், “கலைவாணரின் நினைவாக அவர் பேரில் ஒரு சாலை திறக்கப்பட்டிருந்த புதிதில் அவருடைய உறவினர்கள் எல்லாம் சேர்ந்து அந்த வீதியின் பெயர்பலகை இருக்கும் இடத்தில நின்று ஒரு புகைப்படம் எடுத்து கொண்டிருந்தார்களாம். வழிப்போக்கன் ஒருவன் என்ன இப்படி சாலையை மறித்துக்கொண்டு புகைப்படம் எடுக்குறீங்க இது என்ன உங்கப்பன் வீட்டு ரோடானு கேட்டாராம்” இந்த வார்த்தையை கேட்டு அவர்கள் அவ்வளவு மகிழ்ந்தார்களாம் கலைவாணரின் உறவுகள். மேலும் கலைவாணரின் கொடைத்தன்மையை பற்றிய பல சம்பவங்களை நண்பர் மூலம் கேட்டு பிரம்மித்தேன்.
கலைவாணருக்கு, கலைவாணர் என்ற பட்டத்தை 1947ம் வருடம் சென்னை திருவல்லிகேணியில் உள்ள நடராஜா கல்வி கழகத்தின் சார்பில் கொடுக்கப்பட்டது. இந்த கழகம் என் வீட்டினை அடுத்து உள்ளது என்பதில் ஒரு சின்ன பெருமிதம் கூட இருக்கிறது எனக்கு, இப்போது இந்த கழகத்தின் சார்பில் ஒரு நூலகமும், சமுதாயக்கூடம் ஒன்றும் உள்ளது. அந்த கழகத்தின் சார்பில் சில நலத்திட்டங்களை இன்னும் செய்து கொண்டிருக்கிறார்கள்.
கலைவாணரை பற்றிய தகவல்களை எல்லாம் திரட்டி “சமூக விஞ்ஞானி கலைவாணர்” என்று அவரது மகள் ஒரு புத்தகமாக எழுதி இருக்கிறராம். அன்னாரைப் பற்றிய தகவல்களை வலைதளம் மூலம் அறிய விரும்புபவர்கள் http://www.kalaivanar.comஎன்ற இந்த வலைதளத்திற்கு சென்று பாருங்கள்.

நல்ல மனிதரையும்,அவரைப்பற்றிய ஓர் நல்ல வலைத்தளத்தையும் அறிமுகப் படுத்தியிருக்கிறீர்கள்..நன்றி..
வலைப்பூவில் நிரந்தரமாக வரலாறு சொல்வது வரவேற்கத்தக்கது.
இவர் ஒரு கொலையாளி என்ற வாதமும் வலையுலகில் வந்தபின்தான் தெரிந்துகொண்டேன். அதனைப் பற்றி உண்மை அறியவேண்டும்.
கொலையாளி என்று குற்றம் சாட்டப்பட்டவர், அந்த கொலை வழக்கு சம்பந்தமாக நிறைய பொருட்செலவு ஆனதாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன்.
This book was written by Mrs.Anbukodi Nalla.thambi M.A.M.Phil.She is the Dughter-In-Law of Kalaivanarr N.S.Krishnan.
thankx for the information