அக்டோபர், 2010 க்கான தொகுப்பு

சமீபத்தில் நான் பார்த்த இந்த காணொளி ஒரு நாத்திகனுக்கும் ஆத்திகனுக்கும் உள்ள வேறுபாடுகளையும், வாழ்கையை அணுகும் முறையையும் விளக்கமாகவே கூறுகிறது. இன்று இந்த காணொளியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன், பார்த்து உங்களது கருத்துக்களை மறக்காமல் பின்னூட்டம் செய்யுங்கள்.  

இன்றைய சினிமாவில் கவர்ச்சி அதிகம் வன்முறை அதிகம் என்றெல்லாம் சமூக நல ஆர்வலர்கள் முதல் சாதாரண மனிதர்கள் வரை புலம்புவதை நாம் பார்த்திருக்கிறோம். முதன் முதலில் நம் நாட்டில் இந்த கவர்ச்சி அல்லது ஆபாசமான உடையனிந்தது யார் தெரியுமா? அது தான் இன்றைய ஹிந்தி திரை உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான சாயப் அலி கான் பட்டோடியின் அம்மா சர்மிலா தாகூர். போன தலைமுறை மக்களுக்கு மறக்கமுடியாத ஹிந்தி படங்களான பாபி, குருபானி போன்ற பட வரிசைகளில் [...]

  உலகம் முழுவதற்கும் ஒரு பொதுவான மொழி இருந்தால் உபயோகமாக இ ருக்குமென்று 1887ல்  டாக்டர் லுடோவிக் லாசரஸ் ஜாமன்ஹாப், எஸ்பராண்டோ என்ற ஒரு புது மொழியை உருவாக்கினார். இம்மொழிக்கான இலக்கணம் அதே ஆண்டில் டாக்டர் எஸ்பராண்டோ என்ற புனைப் பெயரில் அவரால் வெளியிடப்பட்டது. இவ்வார்த்தைக்கு நம்பும் டாக்டர் என்று பொருள். நாடுகட்கிடையே மொழித் தடைகளை போக்கி உலகப் பொது மொழியாக இது உருவாக வேண்டுமென அவர் விரும்பினார். தொடக்கத்திலேயே பல நாடுகள் கடுமையாக இதை எதிர்த்தன. ரஷ்யாவில் தீவிர எதிர்ப்பு இருந்தது. 1954 வரை இம்மொழிக்கு அங்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இம்மொழிக்கு [...]

எம்.ஜி.ஆர், சதிலீலாவதி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டார் என்பது எல்லோர்க்கும் தெரியும், அறிமுகப்படுத்திய இயக்குனர் யார் தெரியுமா? அமெரிக்காவில் ஓஹாயோ மாநிலத்தில் பார்டன் என்னும் சிற்றூரில்  பிறந்த எல்லிஸ் ஆர். டங்கன் (Ellis R. Dungan) என்பவர் தான் அவர்.  எம்.ஜி.ஆர் தவிர டி. எஸ். பாலையா, என். எஸ். கிருஷ்ணன் போன்ற காலத்தை வென்ற கலைஞர்களை  தமிழ்த்திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவரும் இவரே…   ( படத்தில் கே. பி. சுந்தராம்பாள், டங்கனின் அம்மா, டங்கனின் நண்பர் மாணிக்லால் டாண்டன், டங்கன். இந்த புகைப்படம் நந்தனார் திரைப்பட படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்டது.  மாணிக்லால் [...]

150 கோடியில் திரைப்படம் தயாரிக்கும் நிலையில் இருக்கும் இன்றைய தமிழ் திரையுலகம் முதன்முதலில் எங்கு ஆரம்பித்தது, யார் ஆரம்பித்து வைத்தது என்பதைப்பற்றி உங்களுக்கு தெரியுமா? இந்த இடுகை  தமிழ் திரையுலகின் முதல் தயாரிப்பாளர் நடராஜ முதலியார் பற்றியது. திரைப்பட நடிகர் மோகன்ராமன் அவர்களின் FACEBOOK ல் இது பற்றிய ஸ்கேன் செய்யப்பட்ட பத்திரிகை செய்தியை சில நாட்களுக்கு முன் பார்த்தேன். பார்த்ததை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். நடராஜ முதலியார் பற்றிய பேட்டி இயக்குனர் ஸ்ரீதர் நடத்திய சித்ராலயா என்ற இதழில் 1970ம் ஆண்டு வெளியானது. 1936 ம் ஆண்டு நடராஜ முதலியார் [...]

இங்கு காணப்படும் படங்கள் யாவும் சென்னையின் பழைய படங்கள், இவை யாவும் திரைப்படங்களில் இருந்து எடுக்கப்பட்டது, ஏற்கனவே வரும் ஞாயிறு வந்தால் சென்னைக்கு வயது 371 என்ற இடுகையில் சென்னையின் பழைய புகைப்படங்களுடன் சென்னையின் வரலாற்றையும் எழுதி இருந்தேன். இப்போது இந்த இடுகையில் உள்ள படங்கள் சென்னையின் எந்த பகுதிகள் என உங்களுக்கு தெரிந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். சென்னையை எவ்வளவு உங்களுக்கு தெரிந்திருக்கிறது என்று பார்போம்…

ரஜினி, சிவாஜி படத்துல சொல்வாரே, பெயரைக் கேட்டாலே அதிருதுள்ளனு, அது போல சில்க் பெயரைக் கேட்டாலே இன்னும் சில பேருக்கு கிளுகிளுப்பா தான் இருக்கும். சரி அவர் காலமாகி 14 ஆண்டுகள் கழிந்து இப்போ என்ன அவரைப்பற்றி பேச்சு, காரணம் இருக்கே அவருடைய வாழ்கையை அடிப்படையாக வைத்து படம் தயாராகிக்கொண்டு இருக்கிறது தெரியுமா? முன்னாபாய்MBBS படத்துல நடிச்ச வித்யாபாலன் சில்க் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்கள்.  வித்யாபாலன் இதுவரை நடித்த படங்களில் ஆபாசமாகவோ, கவர்ச்சிகரமாகவோ நடித்ததில்லை, இவரை எப்படி சில்க் கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்தார்கள் என்பது தெரியவில்லை, இதிலிருந்தே இந்தப் படம் சில்க்கின் கவர்சிகரமான பட வாழ்கையை தவிர்த்து அவரது வாழ்கையை மையப்படுத்தி இருக்கும் என்பது தெளிவாக [...]

  ஓசோன் படிவத்தைப் பற்றி நிறைய பேசிக் கொண்டிருக்கிறோம் சமீப ஆண்டுகளாக, சரி இந்த ஓசோன் என்பது என்ன தெரியுமா?    உண்மையில் ஓசோன் என்பது ஆக்சிஜன் தான், அப்புறம் எதற்கு இதை ஓசோன் என்று கூறுகிறார்கள். ஏன் என்றால் நாம் சுவாசிக்கும் ஆக்சிஜன் போல் இது இல்லை, நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனுக்கு 2 மூலக்கூறுகள் கொண்ட இணைப்பு. அதாவது o2 , ஒசோனுக்கு 3 மூலக்கூறுகள் கொண்ட இணைப்பு  அதாவது o3 உண்மையில் இது நம் உடலுக்கு ஒரு மாசு, இது நமக்கும், விலங்குகளுக்கும் மூச்சுக் [...]

கணக்கு என்றாலே நம்மில் பலருக்கு ஆமணக்கு, அதிலும் இவர்கள் சொல்லித்தருவது போல கணக்கு போட்டால் விடை சரியாக வராது…சிரிப்பு தான் வரும்…  வார இறுதி, சிரிச்சுக்கிட்டே  சந்தோசமாக உங்கள் விடுமுறையை ஆரம்பிக்க  இந்த காணொளிகளை உங்களோடு இன்று பகிர்ந்துகொள்கிறேன்.      

இனவெறி என்பது எல்லா காலங்களிலும், எல்லா நாடுகளிலும் இருந்துகொண்டிருந்த, இருந்து கொண்டிருக்கும் ஒரு பிரச்சனை. இனத்தை அடிப்படையாக வைத்து ஒரு நபரையோ அல்லது அந்த இனத்தையோ துவேஷிப்பது அருவருக்கத்தக்க ஒரு விஷயம். சட்டரீதியாக எல்லா நாடுகளிலும் இதற்கு தடையும், கடுமையான தண்டனைகளும் உள்ளன. ஆனால் இப்போது இனத்துவேஷத்தின் உடல்ரீதியான(physical) கொடுமைகள் குறைக்கப்பட்டுவிட்ட நிலையிலும் பேச்சாலும்(verbal) செயலாலும் இனத்துவேஷம் செய்வதை சில இனவெறியர்கள் இன்னும் செய்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு தற்போது இலக்காகி இருப்பவர் நமது டெல்லி முதலமைச்சர் ஷீலா தீட்சித்.   காமன்வெல்த் [...]