ஜூலை 21, 2011 க்கான தொகுப்பு

சோகத்தில் எல்லாம் பெரிய சோகம் புத்திரசோகம் என்று நமக்கு ராமாயணம் முதற்கொண்டு பல நூல்கள் எடுத்து இயம்பி இருக்கின்றன, அதை மூலக்கருவாக வைத்து எடுத்த படமே தெய்வத் திருமகள். படம் வருவதற்கு முன்னமே படத்தின் தலைப்பினால்   சர்ச்சை,  படத்தின் கதைதிருடப்பட்டது என்று மற்றொரு சாரார், படத்தை பார்த்து வீடு திரும்புபவர்கள் அழுது  வடிந்து திரும்புகின்றனர் என்ற அளவிற்கு உணர்சிகளை தூண்டும் படியாக உள்ளது படம் என்று  நண்பர்களின்  விமர்சனம்,  சரி அப்படி என்னதான் இருக்கிறது இந்த படத்தில்…. படத்தின் கதை ஒரு தந்தையிடம் இருந்து  பிரிக்கப்பட்ட குழந்தையை  சட்ட பூர்வமாக  அவர் மீட்டு எடுப்பதே. திரைக்கதையில்  பெரிய  திருப்பங்களோ, வீர தீர செயல்களோ,  புது தொழில் நுட்ப யுத்திகளோ   துளியும் இல்லை. அப்புறம் எதற்கு இந்த திரைப்படத்திற்கு அப்படி ஒரு வரவேற்பு. ஆங்கிலத்தில் HUMAN VALUES என்று [...]