‘அங்கலாய்ப்பு’ பகுப்புக்கான தொகுப்பு

இனவெறி என்பது எல்லா காலங்களிலும், எல்லா நாடுகளிலும் இருந்துகொண்டிருந்த, இருந்து கொண்டிருக்கும் ஒரு பிரச்சனை. இனத்தை அடிப்படையாக வைத்து ஒரு நபரையோ அல்லது அந்த இனத்தையோ துவேஷிப்பது அருவருக்கத்தக்க ஒரு விஷயம். சட்டரீதியாக எல்லா நாடுகளிலும் இதற்கு தடையும், கடுமையான தண்டனைகளும் உள்ளன. ஆனால் இப்போது இனத்துவேஷத்தின் உடல்ரீதியான(physical) கொடுமைகள் குறைக்கப்பட்டுவிட்ட நிலையிலும் பேச்சாலும்(verbal) செயலாலும் இனத்துவேஷம் செய்வதை சில இனவெறியர்கள் இன்னும் செய்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு தற்போது இலக்காகி இருப்பவர் நமது டெல்லி முதலமைச்சர் ஷீலா தீட்சித்.   காமன்வெல்த் [...]

அமீர் கானின் பீப்ளி லைவ் இந்த வருட ஆஸ்கார் விருதுக்கு இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டிருகிறது.   இது அமீர்கானின் மூன்றாவது முயற்சி, ஏற்கனவே அவரின் லகான், தாரே ஜமீன் பர் என்ற இரண்டு படங்கள் இந்தியா சார்பில்  பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. இந்தப்படம் அமீர்கானால் தயாரிக்கப்பட்டு UTV சார்பில் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த முறை 5 தமிழ்த் திரைப்படங்கள் போட்டியில் இருந்தன, அவை சிங்கம், மதராசப் பட்டினம், ராவணன், விண்ணைத்தாண்டி வருவாயா, அங்காடித்தெரு. இதில் அங்காடித்தெரு பீப்ளி லைவ்க்கு கடுமையான போட்டியை கொடுத்திருக்கிறது என்பதில் பெருமிதம் தான்.  இந்திய விவசாயிகளின் ஏழ்மையையும், அதன் கொடூரத்தினால் ஏற்படும் இன்னல்களையும் விளக்குவதாகவும், இந்திய கலாச்சாரத்தை எடுத்தியம்புவதாகவும் உள்ளதால் அங்காடித்தெருவை தாண்டி ஒரு [...]

இவ்வுலகில் எல்லா விசயங்களும் காரணங்களுடன் தான் நடைபெறுகிறது. எல்லா பொருட்களும் காரணங்களுடன் தான் படைக்கப்பட்டிருக்கிறது, இது ஆத்திகர்கள் அடிக்கடி சொல்லும் ஒரு தத்துவம். சரி பெயர்களில் கூட காரணம் இருக்கவேண்டுமா? ஒரு அடையாளத்தை குறிக்கப் பயன்படும் ஒரு சாதாரண விஷயம் தானே, இவனே, அவனே, நன்பா, தோழி, மச்சான், மாமா…. இப்படி ஏதாவது பொதுவான அடையாளக் குறியீடாக வைத்து கூப்பிட்டிருக்கலாம், கூப்பிட்டும் இருப்பர், சமுதாயம் சிறு சிறு குழுக்களாக இருக்கும்போது ஆனால் நிலைமை இப்போது வேறு. 20 அல்லது 30 பேர் கொண்ட குழுவாக இருந்தால் இது சாத்தியம். இப்போது குழுக்கள் என்பதே  [...]

  கடந்த சில நாட்களாகவே நாடெங்கிலும்  இதைப்பற்றியே பேச்சு, பாபர் மசூதி தீர்ப்பு, பாபருக்கு சாதகமாக இருக்குமா? ராமருக்கு சாதகமாக இருக்குமா? போகிற போக்கை பார்த்தால் கிரிக்கெட் சூதாட்டம் போல தீர்ப்பை முன்னிறுத்தி ஜெயிக்கப்போவது யாரு என்று சூதில் ஈடுபட்டாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை, அவ்வளவு ஆர்வத்தில் இருக்கிறார்கள் மக்கள்.   உண்மையில் இது அவ்வளவு ஆர்வத்தை கவர்கிற விசயமா? சாதாரண நிலத்தகராறு ஒரு நாட்டின் அமைதி, இறையான்மையையே  கேள்விக்குறியாக்கும் விசயமாக மாறிப்போனதற்கு காரணம் என்ன? ரிஷிமூலம் நதிமூலம் எல்லாம் பார்த்தால் தலையே சுற்றுகிறது. இரண்டு தரப்பும் தனக்கென்று ஒரு ஞாயத்தை வைத்து போராடிக்கொண்டிருக்கிறது. அதெல்லாம் இருக்கட்டும், ஆட்சியில் உள்ளவர்களே இந்த தீர்ப்பு அவசியாமா? இதை இப்படியே [...]

கொஞ்ச நாட்களுக்கு முன் சில நாளேடுகளில் இந்தியா 2050 இல் சீனாவை மக்கள் தொகையில் முந்திவிடும் என்று அனுமானமாக செய்தி வந்தது, அது எந்த அளவுக்கு உண்மையோ பொய்யோ நமக்கு தெரியாது  ஆனால் சீனா மனிதவளத்தை சுருக்கி கொள்ளத் தயாராக இல்லை, அதன் ஒரு குடும்பம்  ஒரு குழந்தை கொள்கையை மாற்றம் செய்ய உள்ளது, இதன் மூலம் சீனாவில் 2 குழந்தைகள் பெற்றுக் கொள்ள அனுமதி அடுத்த ஆண்டுக்குள் கிடைத்து விடும் என்று நம்பலாம். சில நாட்களுக்கு முன் செய்திக்கோவை ஒன்றில் சீன தம்பதியர்கள்  தமது [...]

    தேர்தல் நெருங்கி வரும் சூழலில் முதல்வர் கலைஞர், நரேந்திர மோடிக்கு மனிதவள மற்றும் தொல்லியல் அமைச்சர் தங்கம் தென்னரசு  தலைமையில் ஒரு குழுவை அனுப்பியதாக  ஒரு தகவல். நானும் ஏதாவது அரசியல் சார்ந்த விசயமாத் தான் இருக்கும் என்று பார்த்தால் தஞ்சை பெரிய கோயிலின் 1000 வயது பூர்த்தியாவதை ஒட்டிய விழாவில் பங்கேற்க அவருக்கு அழைப்பு விடுக்க இந்த குழு போயிருக்கிறது  என்று கேட்டவுடன் சப்புன்னு போய்டுச்சு. இருந்தாலும் ஒரு குழு போய் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கிறது கொஞ்சம் நெருடலாத் தான் இருக்கு, எதாவது உள்குத்து இருக்கும்னு தான் நினைக்கத் [...]

ஆசிரியர் தினம் என்பது கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் பல்வேறு நாடுகளில் பல்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது.  இந்தியாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் முனைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான நாளை, செப்டம்பர் 5-ம் நாள் ஆசிரியர்கள் தினமாகக்  கொண்டாடப்படுகிறது.   ஒரு சமுதாயத்திற்கு ஆசிரியர்கள் எவ்வளவு முக்கியம் என்பதை, எழுத்தறிவித்தவன் இறைவன் என்ற சொல்லின் மூலம் நாம் உணரலாம். நமது முன்னோர்கள், ஆசிரியர்களுக்கு என்று சிறப்பானதொரு இடத்தை சமூகத்தில் கொடுத்திருக்கின்றனர். உண்மையில் தற்போது ஆசிரியர்கள் அந்த சிறப்பான இடத்திற்கு தகுதி உடையவர்களாக இருக்கிறார்களா? முன்பெல்லாம் ஆசிரியர்கள் பாடங்கள் மட்டும் கற்றுக் [...]

கச்சத்தீவு உண்மையில் தமிழர்களின் சொத்தா?

Posted: செப்டம்பர் 1, 2010 in அங்கலாய்ப்பு
குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

நேற்று மக்களவையில் மறுபடியும் கச்சதீவு பற்றிய விவாதங்களும் அதற்கு வெளியுறவுத்துறை அமைச்சர்  கிருஷ்ணா அவர்களின் விளக்கமும் வெகுஜனங்களுக்கு வெறுப்பை ஊட்டுவதாகவே அமைகிறது, 1974 இல் ஆரம்பித்து 2010 வரை தொடரும் இந்த பிரச்சனையின் மூலம் தான் என்ன? உண்மையில் நமக்கு கச்சதீவில் உரிமை இருக்கிறதா? அதற்கு என்ன சாட்சி? வரலாற்றின் பக்கங்களில் கச்சதீவு இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியா? இது எல்லாவற்றிற்கும் விளக்கம் தரும் வகையில் இந்த இடுகையை சமர்பிக்கிறேன். எல்லோர்க்கும் தெரிந்த விஷயம் தான், தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில், அவர்களோடு பகிர்ந்து கொள்கிறேன். 1480 ம் ஆண்டில் ஏற்ப்பட்ட கடல் [...]

இது ஓர் தொடர் பதிவு… நமக்கு சிறுவயதில் நேர்ந்த அனுபவங்களின் பகிர்வு…  சிறு வயதில் நமக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் இந்த தொடர்பதிவில்  நண்பர் படைப்பாளி என்னை இணைத்து கொண்டதற்கு முதலில் நன்றியை  தெரிவித்துகொள்கிறேன். நண்பர் தனது இடுகையின் முடிவில் என் களர்நிலத்தில் பயிர் செய்ய வேண்டும் என கூறி இருந்தார். அவரின் விருப்பத்திற்கிணங்க இதோ என் சிறு வயதின்  சில நினைவுகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். நான் பிறந்தது திருகழுக்குன்றம் என்ற சென்னையை ஒட்டிய பகுதி, வாழ்ந்தது, வளர்ந்தது எல்லாம் சிங்கார [...]

போதுமா இந்த ஊதிய உயர்வு? என்ற தலைப்பின் கீழ் நேற்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதிய  உயர்வை பற்றிய ஒரு இடுகையை  உங்களோடு பகிர்ந்து கொண்டிருந்தேன். அதற்கு மறுமொழியாக  தோழர் ஞானி தனது கருத்தை வெளியிட்டு இருந்தார். பிற நாட்டு மக்கள் பிரதிநிதிகளின் ஊதியங்களுடன் ஒப்பிடுவது தவறு. அதுவும் டாலரை 47 ரூபாய் என்று கணக்கிட்டு மாற்றிப் பார்ப்பது தவறு. ஒரு காபி விலை இங்கே 10 ரூபாய் என்றால் அங்கே ஒரு டாலர். எனவே டாலரின் அந்த ஊர் மதிப்பு 10 ரூபாய்தான். பிற நாடுகளில் [...]