‘உள்ளூர் சினிமா’ பகுப்புக்கான தொகுப்பு

சமீபத்தில் வெளியான காதலில் சொதப்புவது எப்படி? படத்தை பார்த்து நண்பர்களிடம் அந்த படத்தை பற்றி விவாதித்து கொண்டிருக்கையில் ஒரு நண்பர் சொன்னார்  இதே  GENEREல  ஹிந்தியில் PYAR KA PANCHNAMAனு படம்  வந்திருக்கு பார்த்தீங்கலான்னு கேட்க உடனே பார்க்கணும்னு பிரியப்பட்டு பார்த்தேன். இந்த படத்தின் தலைப்பே வித்தியாசமானது பஞ்சநாமா-ங்கற வார்த்தைக்கு    ஹிந்தியில் POST MORTEM REPORTனு அர்த்தமாம், PYAR KA PUNCHNAMA னா POST MORTEM OF LOVE, வித்யசமா தானே இருக்கு… காதலில் சொதப்புவது எப்படி டாக்குமெண்டரி [...]

சோகத்தில் எல்லாம் பெரிய சோகம் புத்திரசோகம் என்று நமக்கு ராமாயணம் முதற்கொண்டு பல நூல்கள் எடுத்து இயம்பி இருக்கின்றன, அதை மூலக்கருவாக வைத்து எடுத்த படமே தெய்வத் திருமகள். படம் வருவதற்கு முன்னமே படத்தின் தலைப்பினால்   சர்ச்சை,  படத்தின் கதைதிருடப்பட்டது என்று மற்றொரு சாரார், படத்தை பார்த்து வீடு திரும்புபவர்கள் அழுது  வடிந்து திரும்புகின்றனர் என்ற அளவிற்கு உணர்சிகளை தூண்டும் படியாக உள்ளது படம் என்று  நண்பர்களின்  விமர்சனம்,  சரி அப்படி என்னதான் இருக்கிறது இந்த படத்தில்…. படத்தின் கதை ஒரு தந்தையிடம் இருந்து  பிரிக்கப்பட்ட குழந்தையை  சட்ட பூர்வமாக  அவர் மீட்டு எடுப்பதே. திரைக்கதையில்  பெரிய  திருப்பங்களோ, வீர தீர செயல்களோ,  புது தொழில் நுட்ப யுத்திகளோ   துளியும் இல்லை. அப்புறம் எதற்கு இந்த திரைப்படத்திற்கு அப்படி ஒரு வரவேற்பு. ஆங்கிலத்தில் HUMAN VALUES என்று [...]

சிவத்த செங்குத்துப்பாறை அல்லது ரெட்கிளிப் திரைப்படம், ஒரு சீன வரலாற்றுக் காப்பியப் போர்த் திரைப்படம். இது சீனாவில் கிபி 208-209 காலப் பகுதியில் நிகழ்ந்த சிவத்தப் செங்குத்துப்பாறைப் போரின் வரலாற்றை அடிப்படையாக கொண்டது. மூன்று இராட்சியங்கள் அதன் காலப் பகுதியில் நிக்ழ்ந்த அந்தப் பெரும் போர்களையும், அவற்றை ஒட்டிய நிகழ்வுகளையும் இப் படம் சித்தரிக்கிறது. கி மு 208 இல் ஹான் பேரரசு தனது இறுதி காலத்தில் இருக்கும் போது நிகழ்ந்த நிகழ்வுகளின் தொகுப்பே இந்த திரைபடம்.  ஹான் பேரரசின் பிரதம [...]

மார்ச் 14 , நேற்றைய நாளில் தான் முதல் இந்திய பேசும் படம் ஆலம் ஆரா மும்பையில் உள்ள மெஜஸ்டிக் திரையரங்கில் 80 வருடங்களுக்கு முன் திரை இடப்பட்டது.  இந்தப் படம் தான் இந்திய திரை இசையின் முன்னோடி எனக் கூறலாம். ஆலம் ஆரா அர்தேசர் இராணி என்பவரால் இயக்கப்பட்டது, இது ஜோசப் டேவிட் என்பவர் எழுதிய ஒரு பார்சி நாடகத்தை தழுவி எடுக்கப்பட்ட படம். 2  மணி நேரமும் 4  நிமிடங்களும்  ஓடக் கூடிய இந்த படத்தில் வித்தல், ஜுபைதா, L .V . [...]

படத்தின் தலைப்பை பார்த்து இதை ஒரு முழு நீள காதல் திரைப்படம் என்று நினைத்து திரையரங்கில் நுழைந்தால், இது ஒரு சாதாரண குடும்ப சித்திரம். நம்ம தமிழ் திரைப்படங்களில் குடும்ப சித்திரம் என்பது, உணர்ச்சி வயப்படும் வசனங்களும், செண்டிமெண்ட் காட்சிகளும் கொண்டதாகவே இதுவரை நமக்கு தரப்பட்டிருகிறது அதனால் இதை குடும்ப சித்திரம் என்ற வரையரைக்குள்ளும் எடுத்து வரமுடியாது. அப்போ கமலின் வழக்கமான நகைச்சுவை படம் என்று சொல்லலாமா? அதுவும் சொல்ல முடியாது நமக்கு நாமே கக்கத்தில் விரல் [...]

திருவையாறு P ராஜலக்ஷ்மி  , இவர் தான் தமிழ் திரையுலகின் முதல் பெண் இயக்குனர், தயாரிப்பாளர். தமிழ் திரையுலகில் மட்டுமல்ல இந்திய அளவிலும் இவர் தான் முதல் பெண் இயக்குனர் என்று கூறுகிறார்கள். ராஜலக்ஷ்மி 1911 இல் திருவையாறில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தவர், இவரது தந்தை ஒரு குருக்கள். இவருக்கு 11 வயது இருக்கும் போது திருமணம் ஆனது, துரதிர்ஷ்டவசமாக இவரது மன வாழ்க்கை ஆரம்பிக்கும் முன்னமே முடிந்து விட்டது. வரதட்சனை கொடுக்க முடியாத காரணத்தினால் இவரது கணவர் இவரை விட்டு பிரிந்தார்.  இதனால் மனமுடைந்த [...]

  அப்துல் கலாமை முன்மாதிரியாக கொண்டு வாழ்கையில் முன்னேறப் போராடும்  ஒரு ஏழை சிறுவனைப் பற்றிய 87 நிமிட திரைப்படம் ஐ ஆம் கலாம். இந்தப் படம் லண்டனில் நடைபெறவுள்ள உலகத் திரைப்பட விழாவில் பங்குபெற தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது, இதனுடன் மேலும் 8 திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. மே மாதம் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் முதலில் திரையிடப்பட்ட இந்த படம் வரும் டிசம்பரில் திரைக்கு வரவிருப்பதாக தகவல்.   படத்தின் களம் ராஜஸ்தான், அங்கு ஒரு தாபா(dhaba)வில் வேலை செய்யும் சிறுவன் சோட்டு, ஒரு நாள் தொலைக்காட்சியில் அப்துல் கலாமின் [...]

மனிதன் ஒரு சமூகப் பிராணி இது அரிஸ்டாட்டிலின் வாய்மொழி, அவர் எதுக்கு சொன்னாரோ, இந்தப் படத்தை பற்றி விமர்சிப்பவர்கள் எல்லாம் இயக்குனர் சாமியை ஒரு பிராணியை பார்ப்பது போலத் தான் பார்க்கிறார்கள். வரைமுறை  இல்லாத கோணங்களில் சிந்திக்கிறார், சமூகத்திற்கு தேவை இல்லாத, குரூர எண்ணங்களை விதைக்கிறார் என்று பாய்கிறது ஒரு கூட்டம். சிலர் இதெல்லாம் அன்றாடம் இவ்வுலகில் ஏதாவது ஒரு மூலையில் நடந்து கொண்டு தானே இருக்கிறது, இதை படமாக எடுத்ததில் என்ன தவறு இருக்கிறது, சமூகத்தின் கண்ணாடி தானே கலையும், இலக்கியங்களும் என்றும் சாமிக்கு வரிந்து [...]

தொலைபேசி பிடிக்காத, பயன்படுத்த பயப்படும் ஒரு நபரை நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா? அப்படி இருந்தால் அவன் எப்படி இருப்பான், அவன் நமது கார்த்திக் போல இருப்பான். கார்த்திக் ஒரு நல்ல படித்த பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்பவன். கார்திக்கோட பிரச்னை எல்லோருக்கும் பயப்படறது, யார் எது சொன்னாலும் மறுத்து பேசாம இருக்கறது, மனசுக்குள்ள வச்சு புழுங்கறது. அதனால அவனை எல்லோரும் ஏய்த்துக் கொண்டிருப்பதை அவனும் நன்கு அறிவான், அவனுடைய அலுவலகத்திலேயே ஒரு பெண் வேலை செய்கிறாள் அவளின் பால் இவனுக்கு ஒரு [...]

லெட்ஸ் டாக் ஆங்கிலத்தில் 2002 ல்  வெளியான ஒரு இந்தியத் திரைப்படம். மும்பையில் வசிக்கும் ஒரு மேல்தட்டு  தம்பதியை பற்றிய கதை. ராதிகா, நிக்கில் தம்பதி 10 வருடங்களாக திருமண பந்தத்தில் இருப்பவர்கள். ராதிகாவுக்கும் அவருடைய புது அடுக்குமாடி குடியிருப்பின் INTERIOR DESIGNER கிருஷ் க்கும்  6 மாத காலமாக ரகசியத் தொடர்பு இருந்து வந்து அதன் காரணமாக ராதிகா கருவுருகிறாள். இதனால் குற்ற உணர்ச்சிக்கு ஆளாகிறாள் ராதிகா. கருவை கலைக்க நினைக்கிறாள் ஆனால்  நிக்கிலுக்கு இந்த குழந்தையை கலைக்க விருப்பமில்லை.  ராதிகா இந்த விஷயத்தை தன் கணவனிடம் சொல்லிவிட வேண்டும் [...]