1998 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி பரிசு பெற்ற ஆங்கில நாவல் மலை மேல் நெருப்பு. கரிக்னானோவில் தன்னந்தனியாக வாழ்ந்த நந்தாகவுல் என்ற மூதாட்டியை சுற்றி வருகிறது இந்த புதினம். இந்த கதாபாத்திரத்தை வெகு லாவகமாக கையாண்டுள்ளார் அனிதா தேசாய். நந்தாகவுலின் கொள்ளு பேத்தி ராக்காவின் வருகை அதனால் கவுலுக்கு ஏற்ப்பட்ட இடைஞ்சல்களை நன்கு சித்தரித்துள்ளார். கவுலின் தோழி இலா தாஸ்சின்  தோற்றம் எளிமையான, சோகமான நகைச்சுவையை உணர்த்துகிறது. அனிதா தேசாய் 1937 இல்  பிறந்தவர் அவருடைய தந்தை வங்காளத்தை சேர்ந்தவர் தாயார் ஜெர்மன், அனிதா தேசாய் டெல்லிக்கு சென்று கல்வி கற்றார். தெளிவான பகல் பொழுது, கட்டுப்பாட்டு நிலையில், விருந்தும் உபவாசமும் என்ற  3 நாவல்கள் புக்கர் பரிசு தேர்வில் இறுதி சுற்று வரை வந்தது.  இவர் சாகித்ய அகாடமியின்  ஆங்கிலக் குழுவின் அங்கத்தினராகவும் பணியாற்றினார். அசோகமித்திரன் மலை மேல் நெருப்பு என்ற இந்த நூலை மொழியாக்கம் செய்திருக்கிறார்.
 
நந்தாகவுல் தனிமையில் ஒரு மலைவாழ் பகுதியில் வாழ்ந்து வருபவர், அவர் ஒரு பல்கலை கழகத்தின் முன்னாள்  துணைவேந்தரின் மனைவி, கணவர் இறந்தபின் தன் சொந்தங்களை எல்லாம் விட்டு தனிமையில் கசவுரியில் உள்ள கரிக்னோவில் வாழ்ந்து வருகிறார் அவருடைய அன்றாட தேவையை பூர்த்தி செய்ய ராம்லால் என்ற ஒரு வேலையாள் அவளின் உடன் இருந்தார். இந்நிலையில் அவளுடைய பெண் வயிற்று பேத்தி ஒருவள் அவளை பார்க்க வருவதாக தகவல் வருகிறது. பேத்தி ராக்கா வந்து சேர்கிறாள், அவளும் நந்தாவை போலவே தனிமை விரும்பியாகவே இருக்கிறாள். இப்படியாக கதை சென்று கொண்டிருக்கும் போது நந்தாவின் தோழி இலாதாஸ் அவளை பார்க்க வருகிறாள், சமூக சேவகியான அவள் வருகையின் மூலம் தனது பழைய நினைவுகளில் மூழ்க வேண்டியதாகிறது. நந்தாவின் கணவர் எப்படி அவள் மேல் அக்கறை இல்லாமல் இருந்தார், ஒரு விரிவுரையாளருடன்   அவருக்கிருந்த  நட்பின் காரணமாக இவளுக்கிருந்த மன அழுத்தம் எல்லாம் நினைவுக்கு வருகிறது. இந்த சோகத்தின் வெளிப்பாடு தான் அவள் தனிமையில் இந்த மலையில் தனியாக வாழ்வதற்கு காரணம் என்று சொல்லாமல் சொல்கிறார் ஆசிரியர். இலா தாஸ் நந்தாவை பார்த்து விட்டு செல்லும் வழியில் சமூக விரோதிகளால் கொல்லப்பட்டு இறந்து கிடக்கிறாள் எனவும் அவளை நந்தா வந்து அடையாளம் காட்ட அழைக்கப்படுவதும் அதன் பொருட்டு அவள் அடையும் சோகம், இப்படியாக கதை முடிகிறது.
 
நந்தா, ராக்கா, இலாதாஸ், ராம் லால் எல்லா பாத்திரங்களும் மனதில் பசுமையாக நிற்கிறது, பாத்திர வடிவமைப்பும் வெகு நேர்த்தியாக இருக்கிறது. அந்த மலைப்  பிரதேசத்தின் தொன்மை அதன் பின்புலம் யாவையும்  நன்றாக விளக்கியுள்ளார் அனிதா தேசாய். உண்மையில் கசவுரி பிரதேஷம் இன்னுமொரு பாத்திரமாகவே மிளிர்கிறது. 

 

பின்னூட்டங்கள்
  1. படைப்பாளி சொல்கிறார்:

    ஆங்கில நாவல்கள்,கதை,அதன் தமிழ்பெயர்கள்,ஆசிரியர் பற்றி அறியதருகிறமைக்கு நன்றி நண்பரே ..

பின்னூட்டமொன்றை இடுக