இனி காஞ்சிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தயாரிக்கப்படும் பட்டுப்புடவைகள் மட்டுமே “காஞ்சிபுரம் பட்டுப்புடவைகள்” என்று அழைக்கப்படும் என தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்படுள்ளது. இதன் மூலம் தனித்தன்மையுடைய காஞ்சிபுரம் பட்டுப்புடவைகளுக்கு சட்டரீதியான பாதுகாப்பும் அங்கீகாரமும் கிடைக்கும் எனவும், இது நெசவாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் எனவும் அறியப்படுகிறது. எதிர்வரும் காலத்தில் காஞ்சிபுரம் பட்டுபுடவைகளுக்கு என தனி முத்திரை பதிக்கப்பட்டு அதற்கு கீழே RGI என குறிக்கப்பட்டிருக்கும் எனவும் கூறுகின்றனர். அதை வைத்துக் கொண்டு நுகர்வோர்கள் காஞ்சிப்பட்டின் நம்பகத்தன்மையை தெரிந்து கொள்ளலாம். இந்த முத்திரையை உபயோகப்படுத்த பதிவு செய்து கொள்ளாதவர்கள், இனி காஞ்சிபுரம் பட்டுச் சேலைகள் என்கிற பெயரில் விற்பனை செய்தால் ஆறு மாதத்திலிருந்து மூன்று வருடங்கள் வரை சிறை தண்டனையும், ஐம்பதாயிரம் ரூபாய் முதல் மூன்று லட்சம் வரை அபராதம் விதிக்கப்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
இதன் மூலம் காஞ்சிப் பட்டுபுடவைகளை தயாரிக்கும் நெசவாளர்களுக்கும், அதை வாங்கும் நுகர்வோர்கள் ஆகிய இருதரப்பினருக்குமே இந்தக் காப்புரிமை மூலம் பயன் கிடைக்கும். போலிகளை இனங்காணவும், உண்மையான காஞ்சிப்பட்டை நுகர்வோர் வாங்கி பயனடையவும் இது ஏதுவாகிறது.
நல்ல தகவல்
நன்றி நண்பரே…
நன்றி நண்பரே! நல்ல தகவல்
தகவலுக்கு நன்றி .. சரியான முடிவை அரசு எடுத்துள்ளது.
நெய்தவன் மனதில் மகிழ்ச்சி நெய்த செய்தி…அருமை..
எனக்கு காஞ்சிவரம் படம் தான் நினைவுக்கு வருகிறது… வாழ்த்துக்கள்…
Really nice one . I’m also from covers family background very much usefull news .
hi kiruba, thankx for ur visit, i am also from a weavers family, but not silk weavers, we r (kaili) handloomers…
I’m from silk saree weavers family only . Ur post is very much informative . Thank you .