Posts Tagged ‘ஸ்டாலின்’
உலகப் பொது மொழி – எஸ்பராண்டோ
Posted: ஒக்ரோபர் 20, 2010 in தகவல்கள்குறிச்சொற்கள்:இத்தாலி, இலக்கணம், உச்சரிப்பு, எஸ்பராண்டோ, ஐரோப்பிய மொழி, கல்வியறிவு, சாந்தி நிகேதன், சீனா, நாசி, பெய்ஜிங், பொதுமொழி, மொழி, ரஷ்யா, லண்டன், வானொலி நிலையம், ஸ்டாலின், ஸ்பானிஷ், Beijing, china, esperanto, europe, grammer, italy, language, london, nazi, pronountation, radio, russia, santhi niketan, spanish, stalin, vinoba bave
குல்சாரி – உலகப் புகழ்பெற்ற ரஷ்ய குறுநாவல்
Posted: ஓகஸ்ட் 25, 2010 in படித்ததில் பிடித்ததுகுறிச்சொற்கள்:அதிகாரி, இரண்டாம் உலகப்போர், கம்யூனிசம், கிர்கீசியா, குதிரை, குறுநாவல், குல்சாரி, கூட்டுப்பண்ணை, சிங்கிஸ் ஐத்மாத்தவ், தொழிலாளி, நாவல், பட்டறை, பரப்புரை, புரட்சியாளர், ஸ்டாலின், blacksmith, Chinghiz Aitmatov, co-operative society, communism, communist, gulsary, horse, Kyrgyz, novel, rebel, stalin
கிர்கீசியாவில் பிறந்த சிங்கிஸ் ஐத்மாத்தவ் படைப்புகள் அனைத்தும் உலகப் புகழ் பெற்றவை குல்சாரி என்ற நாவல் அதில் ஒன்று. இரண்டாம் உலகப் போரில் சோவியத் சமுதாயத்தில் நடைபெற்ற எல்லாவற்றிற்கும் ஸ்டாலின் தான் காரணம் என்ற பரப்புரையை இந்த குறு நாவல் தகர்க்கிறது. சமூகப் போராட்டத்தை மிக நேர்த்தியாக குதிரையை(குல்சாரி) மையமாக வைத்து பின்னப்பட்டுள்ள இந்த கதை படிப்போர் நெஞ்சை கவர்கிறது. இந்த குறுநாவலில் இடம் பெற்றுள்ள குதிரையும் மக்களும் நம்மோடு வாழ்ந்து பிரிகின்றனர்.
தானாபாய் என்ற வயது முதிர்ந்த தொழிலாளியையும் அவன் வளர்த்த குல்சாரியையும் மையப் படுத்தி இந்த கதை உள்ளது. நாவலின் ஆரம்பத்தில், முதியவரான தானாபாய் தன் மருமகளின் சுடு சொற்களால் புண்ணாகிப் போன இதயத்துடன் தன் கிழட்டு குதிரை குல்சாருடன் தன் இருப்பிடத்தை நோக்கி போகும் போது பழைய நினைவுகளை நினைத்து வருந்தி கொண்டு போவது போல கதை ஆரம்பிக்கிறது.
இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்து தொழிலாளர் வர்க்கம் புதிய அரசை ஏற்படுத்தி ஆண்டு வந்த ஆரம்ப காலம், கிராமத்தில் கூட்டுப் பண்ணைகள் தீவிரமடைந்து வர்க்க பேதமற்று சமுதாய முன்னேற்றத்திற்காக போராடி கொண்டிருந்த காலம். கூட்டுப் பண்ணைகளில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடைபெறுகின்றன. முக்கிய பொறுப்புகளில் எதிர் புரட்சியாளர்கள் உள்நுழைந்து அவற்றை சீரழிக்கிறார்கள். அரசு அதிகாரிகளில் சிலர் தான்தோன்றிதனமாகவும், பொறுப்பற்றவர்களாகவும், அதிகாரமிக்கவர்களாகவும் மாறி மக்களின் மீது ஆதிக்கம் செலுத்துபவர்களாகவும் ஆகி விடுகின்றனர். இத்தகைய போக்கு தானாபாயை சீரழிக்கிறது. பட்டறையில் வேலை செய்து வந்த தானாபாய் முதலில் குதிரைகளை பராமரிக்கும் தொழிலாளியாய் தன் கட்சிக்காக உழைக்க முன் வருகிறான். அந்த சமயத்தில்தான் இளம்பிராயத்து குல்சாரி அவனுக்கு அறிமுகமாகிறது. குல்சாரி குலுங்கா நடையன் என்ற சிறப்பு பெயருடன் பலரை கவரும் வகையில் உள்ள குதிரை, தன் எஜமானிடம் அதிக விசுவாசம் கொண்டது. பந்தயங்களில் பல வெற்றியை தானா பாய்க்கு ஈட்டி தருகிறது. ஒரு நாள் அதை அரசு அதிகாரிகளுக்கு ஏவல் செய்ய அது அழைத்து செல்லப்படுகிறது. அடிக்கடி அது கிராமத்திலிருந்து மலையில் எஜமானின் இருப்பிடத்திற்கு தன் மந்தையை சேர்ந்த குதிரைகளை பார்க்க ஓடிவருகிறது. தானாபாயின் நண்பர் சோரோ குதிரை வளர்ப்பிலிருந்து அவனை ஆட்டு கிடைகளை பராமரிக்க நியமிக்கிறார், போதிய உணவோ உறைவிடமோ இல்லாமல் அவரும் அவரது ஆடுகளும் பல இன்னல்களை அனுபவிக்க நேரிடுகிறது. அரசு தரப்பில் எந்த உதவியும் செய்யாமல் ஆடுகளை சரியாக பராமரிக்கவில்லை என்று குற்றம் சுமத்தப்படுகிறான்.
அதனால் அரச அதிகாரிகளை அடிக்க போய் விடுகிறான் தானாபாய். இதனால் கட்சியிலிருந்து விலக்கி வைக்கப்படும் சூழல் ஏற்படுகிறது. இதனால் மனமுடைந்து தன் சேவைகளும், உழைப்பும் வீணாய் போனதை எண்ணி வருந்துகிறான். இந்த துயரம் தாளாமல் அவரது நண்பர் சோரோ இறக்க நேரிடுகிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு அவனை மீண்டும் கட்சியில் சேர அழைப்பு விடுக்கின்றனர், ஆனால் தன் பழைய கசப்பான நினைவுகளால் மனமொடிந்திருந்த தானாபாய் சேராமலே இருக்கிறார். இந்நிலையில் அவனது நண்பனாக விளங்கும் குல்சாரி இறந்து அந்த மனசுமையோடு வீடு நோக்கி போவது போலவும், விரைவில் கட்சியில் சேர்ந்து சமுதாயப் பனி ஆற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடும் தானாபாய் என்ற தொழிலாளி தன் கம்யூனிச சித்தாந்தத்தின் மேல் அளவற்ற மதிப்பும் அதுவே உலகை நிலை நிறுத்தவல்ல சக்தி எனவும் நமக்கு சொல்லாமல் சொல்கிறது இந்த நாவல்.
ஆரம்பத்தில் தொழிலாளிகளின் கூட்டுப் பண்ணைகள் எவ்வாறு நடைபெற்றன. அது எத்தகைய இன்னல்களை சந்தித்தன எவ்வளவு தூரம் தங்கள் உயிரை கொடுத்து வேலை செய்தார்கள். அதன் பலனை கூட அவர்களால் அனுபவிக்க முடியாமல் போன சோகம், மேலும் கட்சிகள் மேல் அவர்களுக்கு இருந்த மதிப்பு, வர்க்க பேதமற்ற அரசிலும் அதிகாரிகள் என்ற பெயரில் ஒரு மேலாண்மை கொண்ட பிரிவு உருவான விதம், அது நாளடைவில் சரி செய்யப்பட்ட தகவல் எல்லாம் இந்த நாவலை படிக்கும் போது நமக்கு புலனாகிறது. அந்த கஷ்டங்கள் தான் மக்களை கம்யூனிச சித்தாந்தத்தை பயந்து நோக்க வேண்டிய கட்டாயத்தில் இன்றைய சொகுசு வாழ்க்கைக்காக போட்டு உடைத்த உண்மையும் நமக்கு புலனாகிறது.
எழுத்தாளர் சிங்கிஸ் ஐத்மாத்தவ் பற்றி மேலும் நீங்கள் அறிந்து கொள்ள விக்கிப்பீடியாவின் கீழ்கண்ட வலைதளத்திற்கு சென்று பாருங்கள்.