Posts Tagged ‘mahabaratham’

சிவத்த செங்குத்துப்பாறை அல்லது ரெட்கிளிப் திரைப்படம், ஒரு சீன வரலாற்றுக் காப்பியப் போர்த் திரைப்படம். இது சீனாவில் கிபி 208-209 காலப் பகுதியில் நிகழ்ந்த சிவத்தப் செங்குத்துப்பாறைப் போரின் வரலாற்றை அடிப்படையாக கொண்டது. மூன்று இராட்சியங்கள் அதன் காலப் பகுதியில் நிக்ழ்ந்த அந்தப் பெரும் போர்களையும், அவற்றை ஒட்டிய நிகழ்வுகளையும் இப் படம் சித்தரிக்கிறது.

கி மு 208 இல் ஹான் பேரரசு தனது இறுதி காலத்தில் இருக்கும் போது நிகழ்ந்த நிகழ்வுகளின் தொகுப்பே இந்த திரைபடம்.  ஹான் பேரரசின் பிரதம மந்திரி கோ கோ (Cao  Cao)  ஒருங்கிணைந்த சீனத்தை உருவாக்க கிழக்கு பகுதியின் மீதும் தெற்கு பகுதியின்  மீதும் படையெடுக்க ஹான் பேரரசின் அரசரிடம் இசைவை பெற்று ஒரு பெரும் படையுடன் கிழக்கு நோக்கி பயனப்படுகிறார், போரில் Liu Bei அரசான Xu வம்ச அரசு வீழ்த்தப்படுகிறது, அகதிகளாய் போன தன மக்களுடனும், சொற்ப வீரர்களுடன் Liu  Bei, தெற்கு பகுதியை ஆளும் Wu வம்சத்தின்  Sun  Quan உதவியை கோருகிறார். அவருடன் இனைந்து Cao  Cao வின் கப்பற்படையை இறுதிப் போரில் வெல்வதே கதையின்  மீதம். 

சிவத்த செங்குத்துப்பாறை திரைப்படம் ஆசியாவில் இரண்டு பாகங்களாய் வெளியானது, மொத்தத்தில் 4  மணி நேரத்திற்கும் மேலான கதையமைப்பு கொண்டது. முதல் பாகம் ஜூலை  2008லும் இரண்டாம் பாகம் ஜனவரி 2009லும் வெளியானது. ஆசியாவை தவிர்த்து மேற்கத்திய திரை ஆர்வலர்களுக்காக இரண்டரை மணி நேர படமாக சுருக்கி 2009  இல் வெளியானது. 80 மில்லியன் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் இதுவரை ஆசியாவில் தயாரிக்கப்பட்ட  செலவுகூடிய திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படமே ஆசியாவில் அதிக வருமானம் ஈட்டிய திரைப்படமும் ஆகும். முதல் பாகம் ஆசியாவில் 124 மில்லியன் டாலர் வசூலையும், சீனாவில்  டைட்டானிக் வசூலை முறியடித்ததாக தகவல்.

இப்படத்தை இயக்கியவர்  MISSION IMPOSIBLE II,  FACE  OFF , BROKENARROW  முதலிய ஹாலிவுட்  திரைப்படங்களை இயக்கிய  ஜான் வூ அவர்கள்.

 மகாபாரதத்தில் சக்கர  வியுகம் பற்றியும் அபிமன்யு அதில் சிக்குண்டு இறந்ததை பற்றியும் நாம் படித்திருக்கிறோம். அது போல இந்த திரைப்படத்தில் வியுக முறைகள் நன்கு விளக்கப்பட்டு இருக்கிறது. பெரிய ராஜ்யம் ஒன்றின் பலம் வாய்ந்த போர் வீரர்களை சக்கர வியுகம் போன்ற ஒரு முறை மூலம் சிறிய படையை கொண்டு எப்படி வெல்கிறார்கள் என்பதை வெகு அருமையாக படமாக்கியுள்ளார் ஜான் வூ. அதே போல இரண்டாம் பாகத்தில் கப்பற்படை கொண்டு நடத்தும் போர் காட்சிகள் அற்புதமாக படமாக்கப்பட்டுள்ளது. இந்த கப்பற்படை போர் கட்சிகளை படமாக்கும் போது படத்தில்  கப்பல்களை    எரித்து நாசப்படுத்துவது போன்ற காட்சிகள் எடுக்கப் பட்டது, அப்போது நடந்த விபத்தின் போது ஒருவர் இறக்க நேரிட்டது மேலும் 6 தொழில் நுட்பக்கலைஞர்கள் கடுமையான விபத்துக்கு ஆளானார்கள்.

சீனத்தின்  அந்த கால போர்முறைகளையும், ராஜ தந்திரங்களையும் இந்த படம்  நன்கு விளக்குகிறது. period படம் பார்ப்பதில் ஆர்வம் கொண்டவர்களுக்கு இது ஓர் அருமையான படம், மேலும் நல்ல தொழில்நுட்பத்தோடு எடுக்கப்பட்ட படம்.

ஜான் வூ ஒரு ஸ்டைல் ஆன இயக்குனர் அவருடைய படங்களில் கதா நாயகர்களுக்கும் வில்லன்களுக்கும் நல்ல பரிணாமங்களை எதிர்பார்க்கலாம், அதை இந்த படத்திலும் நன்கு செவ்வனே செய்து இருக்கிறார்.  எனக்கு நீண்ட நாள் ஆசை ஜான் வூ ஒரு இந்திய படம் எடுத்தால் எப்படி இருக்கும் என்று, அதிலும் ரஜினி,  சாருக்கான், நாகர்ஜுனா போன்ற மாஸ் ஹீரோக்களை வைத்து எடுத்தால் எப்படி இருக்கும்…